
Monday, October 26, 2009
இயற்கை நங்கை....

Thursday, October 15, 2009
ஒரு மழை நாளில்..
எல்லா தினங்களும் ஒரே மாதிரி விடிவதில்லை. சில தினங்கள் இருளை விட்டு மெதுவாகசோம்பல் முறிக்கும் போதே ஆசிர்வதிக்கபடுகிறது. அதனிடம் நமக்குக்கொடுக்க நிறையஇருக்கிறது. எடுத்துக்கொள்வதும் கொள்ளாததும் நம் இஷ்டம். சில தினங்கள் எதோ ஊடலில்இருக்கும் காதலி, ஒற்றை சொல்லிலேயே பதில் சொல்வது போல நம்மிடம் அளவாகபேசிச்செல்லும். சில தினங்கள் நம்மை அவமானத்தால் குளிப்பாட்டுகின்றன. சில தினங்கள்கோபத்தை உமிழ்கின்றன. காரணங்கள் அதற்கு
அவை நம்மோடு பேசும். நம்மோடு அழும். நமக்கு ஆறுதல் சொல்லும். நம்மிடம் மன்னிப்புகேட்கும். செல்லமாக கோபித்துக்கொள்ளும்.. நமக்குத்
-----------
சின்ன வயது மழை நாட்கள் எனக்கு காதிதக்கப்பல்களையும், மொட்டை மாடி மழை குளியல்களையும், அதன் பிறகு வரும் காய்ச்சலையும், பள்ளி விடுமுறைகளையும் ஞாபகப்படுத்துகின்றன..
நான் 8 வது படித்துக்கொண்டிருந்தேன்.மதுரை
அப்போது வெள்ளத்தில் வீடிழந்தவர்களைப் பற்றி யோசிக்க வில்லை, உயிரிழந்தவர்களை பற்றி யோசிக்க வில்லை, உடமையிழந்தவர்களைப் பற்றி யோசிக்கவில்லை... யோசிக்கத்தெரியவில்லை.. கணக்கு பரீட்சை அன்று இல்லை.. அவ்வளவுதான் தெரிந்தது..
மழையின் வீரியத்தை உணராத வயது அது... விடுமறையாக மட்டுமே தெரிந்த மழை நாள் அது..
----------------
நான் டி.வி.எஸ். பள்ளியில் படித்தபோது அதிகாலை ஆறு மணிக்கு பள்ளிப்பேருந்து எனது வீட்டு வாசலில் நிற்கும். தூக்கம் கலையும் முன் ஷூ சாக்ஸ் பவுடர் எல்லாம் போட்டு ஏன் அப்பாவுடன் பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருப்பேன். முதுகில் சற்றே கனத்த பை, கையில் சுட சுட இட்லியோ தோசையோ நூடில்சோ. தூரத்தில் பேருந்து வருவது அதன் முன் விளக்கின் உபயத்தில் தெரியும். நான் தினமும் பயணித்த பேருந்தின் எண் 2 . பேருந்து, நிறுத்தத்தில் நின்றவுடன் முதலில் யார் ஏறுவது என்ற போட்டி இருக்கும்.எப்போதும் தொற்றுப்போவேன்.. :)
நான் ஏறியவுடன் விறு விறுவென்று ஒட்டுனருக்குப்பின்னல் இருக்கும் இருக்கை வரிசையில் 5 வது இருக்கையில் அமர்ந்து சடாரென ஜன்னல் திறந்து வீட்டு வாசலில் நிற்கும் என் அம்மாவிடம் 'டாட்டா' காட்டுவேன்... அந்த 5 வது இருக்கை எனக்கென்றே ஒதுக்கப்பட்டது. பேருந்தின் கண்டக்டர் அக்காவிடம் பட்டா எழுதி வாங்காத குறை.
--------------
ஒரு குளிர் நிரம்பிய மழை இரவில் கல்லூரி விடுதியில் படுத்திருந்த சக மாணவனுக்கு வலிப்பு வந்தது. அதன்பிறகு வலிப்பு வரும் காட்சியை பார்த்தாலே அந்த நண்பனும் பின் குளிர் நிரம்பிய இரவும் ஞாபகம் வரும்.
Sunday, August 16, 2009
ஹாப்பி பெர்த் டே!
வந்து போகும் என் நாள்
வழக்கத்திற்கு மாறாய்
பிரம்மிப்பின் வாசலில்
இழுத்து நிறுத்தியிருக்கிறது
என்னை!
நேற்றைய நள்ளிரவில்..
இதுவரை நானறிந்திராத
திசைகளினின்று நீண்டு...
கதகதப்பாய்
என் விரல் கோர்த்த கரங்கள்...
கைகுலுக்கிய தோழமைகள்...
இதம் நிறைத்த
தலைகோதல்கள் எல்லாம்..
என் இருப்பை முழுதாய்
அர்த்தப்படுத்திப் போயிருக்கின்றன!
துக்கத்தில் தூக்கம் தொலைத்த
இரவுகள் உண்டு...
மிதமிஞ்சிய மகிழ்வும்
உறங்க விடாதென்ற உண்மை
விளங்குகிறது இப்போது..
வாழ்த்துச் சுமந்து வந்த
வார்த்தைகள் எல்லாம்
பூக்களாய் மலர்ந்து
மணம் பரப்புகின்றன மனதிற்குள்...
திக்கெங்கிலும்
நிரம்பி வழியும் அன்பினை
சேர்த்தெடுக்கத் தவிக்கிறேன்...
இதயம் மலர்ந்து...
கண்கள் பனிக்க...
'என்றும் என்னோடிருங்களெ'ன
வேண்டுவதைத் தவிர்த்து
வேறொன்றும்
சொல்லத் தோன்றவில்லை
இப்போது!

இவ்வளவு அன்பும் எனக்கே எனக்கா என்ற திகைப்பு மேலிட பூரிப்பில் திளைத்திருக்கிறேன்.
இரவு 8 மணியிலிருந்து ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை போனில் வாழ்த்திக்கொண்டேயிருந்த அப்புஹய் மிகச்சரியாய் இரவு 12 மணிக்கு... வழக்கம் போல தூங்கிப்போனாள்!!
நள்ளிரவில் வாழ்த்து சொன்ன வினோ! வாய்ஸ் மெயில்லில் 'ஹாப்பி பெர்த் டே!" பாடிய பூக்கா :)
நடுநிசியில் குறுந்தகவல் அனுப்பி விடியும் வரை யாராயிருக்குமென யோசிக்க வைத்து அதிகாலையில் உற்சாகம் மிகுத்து பாசமாய் வாழ்த்தினாள் ஜி3.
சொந்த ஊருக்கு போயிருக்கும் ஜி நியாபகமாய் வாழ்த்தியது வியப்பு!
மாமா அதை சித்தி சித்தப்பா தங்கைகள் தம்பிகள் இந்திய நண்பர்கள்... ஐ.எஸ்.டி. போட்டு வாழ்த்து சொன்னார்கள்.
அப்பாவின் கவிதையும் அம்மாவின் கடிதமும் இதம் சேர்த்தது! நான் அதிக நாட்கள் இங்கு (சிகாகோ) இருக்க முடியாமல் தடுப்பது இவைகள் தாம் :)
அனைத்திற்கும் மேலாக எனது நண்பர்கள் என்னுடைய பிறந்தநாளை கடற்கரையில் கொண்டாடியது. சில சமயம் சந்தோசத்திலும் மனம் கணமாகும். அது அத்தகைய தருணம். உணர்ச்சிகள் குவியலாய் வந்தாலும் அதை வெளிக்காடக்கூட நேரம் இல்லாமல் எனது நண்பர்களை ரசித்துக்கொண்டிருந்தேன்.அவ்வளவு அழகாய் இருந்தது அந்த மாலை... முதன்முதலாய் சிகாகோவும் அன்று எனக்க்குப்பிடிதிருந்தது!
அனைத்திற்கும், அனைவருக்கும் இங்கு என் அன்பைச் சொல்லிக் கொள்கிறேன். நன்றியிலும் நெகிழ்விலும் நிறைந்திருக்கிறேன்.. இன்று மீண்டும் புதிதாய்ப் பிறந்திருக்கிறேன்!!
பி.கு. : இவ்வளவு நாள் ஏன் நான் அன்பினால் நன்றி செய்யவில்லை என்று தெரியவில்லை. அனால் இனியும் செய்யவில்லை என்றல் என்னால் தூங்கக்கூட முடியுமா? தூக்கம் இழந்த இரவுகள் போதும்.. இனி சந்தோஷ நிம்மதியில் தூங்குவேன்... மீண்டும் - "என்றும் என்னோடிருங்கள்!!" என்று வேண்டுவதைத்தவிர வேறு என்ன செய்ய?? தெரியவில்லை....
Thursday, August 13, 2009
தரையிறங்கும் விமானங்கள்...
Tuesday, August 11, 2009
அன்பே வெங்கடாசலம் ..!
Sunday, August 9, 2009
கவிதை அல்ல.. ஆக்கிக்கொள்ளலாம்.. 3
Saturday, August 8, 2009
பாலகாண்டம்
சிறுவர்களின் உலகம் மிகவும் சிறியது. சலனமற்றது. இயல்பானது. பயம், அச்சம், அவமானம், தோல்வி,காதல், எதிர்காலம்.. எதுவும் அவர்களுக்கு தெரியாது. அவர்களது அதிகபட்ச பயம் காலையில் பள்ளிக்குக் கிளம்பும்போது கண் முன்னால் பிம்பங்களாக கையில் பிரம்போடு வரும் கணக்கு வாத்தியார்கள்தான்.. குழந்தைப் பருவத்தின் புதிர்களை கேள்விகள் ஆக்ரமித்தன.. நிறம் என்றால் என்ன? இசை என்றால் என்ன? வாசனை? தூக்கம் ஏன் வருகிறது? இன்று இரவு பூரி கிடைக்குமா? அவ்வளவுதான் அவர்களது கேள்விகள்.. இவை அனைத்திற்கும் பதில் இருந்தாலும் இல்லாமல் போனாலும் கேள்விகள் இருந்துகொண்டே இருக்கின்றன..
முதன் முதலில் 'மர'த்திற்கு 'மரம்' என்று பெயர் வைத்தவனுடைய பரவசம் அடுத்த தலைமுறைக்கு இல்லாமல் போனது மாதிரி, கால ஓட்டத்தில் கேள்விகள் தொலைந்து பயங்களாக மாறுகிறது..
எண்ணங்களில் பின்நோக்கி செல்கையில், அதோ அங்கு ஒரு சிறுவன் டி .வி.யில் 'டாம் அண்ட் ஜெர்ரி' பார்த்துக்கொண்டிருக்கிறான்... மனதில் எள்ளளவும் சலனம் இல்லை.. அவனது முழு கவனமும் டாம், ஜெர்ரியை பிடித்துவிடுமா? ஜெர்ரி எப்படி தப்பிக்க போகிறது? என்பதில் இருக்கிறது.. நன் அவன் அருகில் அமர்ந்ததை அவன் கவனிக்கவில்லை.. கண் முன்னாள் கைகளை அசைத்தேன்.. ம்ஹூம்...பிரயோஜனம் இல்லை... அருகிலேயே, அவன் சற்று முன் வரைந்து, பாதியில் விட்டிருந்த ஓவியம் இருந்தது. கூடவே சார்ட்,பென்சில், ரப்பர், வாட்டர் கலர். ஒரு வெள்ளைத்தாளை எடுத்து அவனுக்கு ஒரு கடிதம் எழுதினேன்..
வணக்கம்..
நல்லா இருக்கியா? உனக்கு என்ன வயசு? 8? 9? நான் நல்லா இருக்கேன்..இது உனக்கான கடிதம். முடிந்தால் நீ மட்டும் படித்துவிட்டு கிழித்துவிடு. உனக்கு என்னைத்தெரியாது. அனால் எனக்கு உன்னை நன்றாகத் தெரியும்.
நீ நன்றாக படம் வரைவியமே? ம்ம்ம்.. இதோ இந்த படத்தை ஏன் பாதியில் விட்டு விட்டாய்? இப்போது உனது வீட்டின் பரணில் புழுதி படர்ந்து இப்படியே இருக்கிறது.. முடிந்தால் முடித்து விடு. பிற்காலத்தில் நீ ஓவியம் வரையப்போவதில்லை.. பாட்டு கிளாஸ் ஒழுங்கா போக மறுக்கிறாயா? சென்றுவிடு. பின்னாளில் அடிக்கடி வருத்தப்படுவாய்.. நேற்று நீ 'காளி'யுடன் 'டூ' விட்டாயாமே? நாளைக்கே 'பழம்' விட்டு விடு.. 10 வயதிற்கு மேல் அவன் வேறு திசை, நீ வேறு திசை.. உனக்கு மிகவும் பிடித்த அந்தக் கரடி பொம்மை கொஞ்ச நாளில் தொலயப்போகிறது... கவலைப்படாதே. இரண்டு தினங்கள் அழுவாய். பிறகு பழகிவிடும்.
இன்னும் பதினைந்து வருடத்திற்குள் நீ அமெரிக்கா செல்ல இருக்கிறாய் தெரியுமா? உனக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கப் போவதில்லை. உன் அம்மாவின் வைராக்கியத்தை தகர்க்க போகிறோம் என்று அறிவாயா? உலகின் மிகப்பெரிய ஏரியில் குளிக்கப்போகிறாய் தெரியுமா? நயாகரா என்றால் என்னவென்று தெரியுமா? :)
இன்னும் ஓர் ஆண்டில் நீ வேறு பள்ளி செல்ல இருக்கிறாய். அதன் அச்சம் அறிவாயா? புதிய நண்பர்கள், புதிய சூழல், புதிய அனுபவம் வரப்போவதை உணர்வாயா? அவர்களில் சிலர் இருப்பார்கள் சிலர் விடுப்பார்கள் சிலர் கொடுப்பார்கள் சிலர் எடுப்பார்கள் புரிவாயா? தெரிந்தோ தெரியாமலோ நீ மற்றவர்களுக்கு இழைக்கும் தவறுகளை ஜீரணிக்க முடியுமா உன்னால்?
இரு.. எங்கே போகிறாய்?.. ஹா ஹா.. லட்டு எடுத்து வரவா? இப்போதே குறைத்துக்கொள். நீ சைட் அடிக்கப்போகும் பெண்கள் உன்னயும் சைட் அடிக்க வேண்டுமெனில் :) வாய் நிறைய லட்டு.. கண் முழுக்கச் சிரிப்பு.. இதயம் முழுக்க மகிழ்ச்சி.. வரமடா இது.. அனுபவி! அட! இதை அனுபவிக்கத் தெரியுமா உனக்கு?
பள்ளியின் farewellன் போதும், கல்லூரியின் இருதியாண்டிலும் சிறு களங்கங்கள் வருவதை உணர்கிறாயா? ஒரு பெண்ணிற்க்காக தலை மயிர் துறப்பாய் எனத்தெரிந்தால் இப்போது இவ்வளவு நிம்மதியாக இருப்பாயா? நண்பனின் துரோகம் தாங்க முடியுமா உன்னால்? உன் பதின்ப வயதின் கனவு மிகப்பெரியது. கனவுகளைத் துரத்த தெம்பு இருக்கிறதா?
நான் இப்போது பார்க்கும் சிறுவர்கள் போல் நீ இல்லை. உனக்கு இன்டர்நெட் தெரியாது. கம்ப்யுட்டர் தெரியாது. பவர் ரேஞ்சர்ஸ் தெரியாது. உன் உலகம் மிக ஏளிமையானது. சில சமயம் பொறாமையாகக் கூட இருக்கிறது. இவ்வளவு கேள்விகள் இல்லை உன்னிடம். இவ்வளவு குழப்பங்கள் இல்லை. உன்னிடம் சில விஷயங்கள் சொல்ல வேண்டும். இப்போது புரியாவிட்டாலும் மனதில் வைத்துக்கொள்.
எதிர்காலம் எப்போதும் நிலையற்றது. புரிந்துகொள். கொஞ்சம் கோபம் தவிர். நிதானம் கொள். மேலும் மேலும் கனவு காண். ஒரு நாள் நடக்கும். நண்பர்களுக்கு என்ன வேண்டுமானாலும் செய். ஒன்றும் எதிர் பார்க்காதே. எதிரிகளைப் பேசவிடு. சிறு நீர் களிக்கையில் சிரித்துக்கொள்.
பொறாமைப் படுபவர்களைக் கண்டு கோபப்படாதே. அது ஒரு வகையான பாராட்டு. துரோகங்களை மன்னித்து விடு. மறக்காதே. முடிந்தால் 10ம் வகுகப்பிற்கு பிறகும் ‘ஜெயா' missசிடம் ட்யூஷன் போ. 8ம் வகுப்பிற்குப் பிறகு ‘தமிழை' இரண்டாம் மொழியாகப் பயில். பின்னாளில் தமிழ் உனக்கு பிடிக்கும். ஆனால் படிக்க முடியாமல் போகலாம்.
Shuttle, Piano, Skating, Cricket, Swimming, Vocals எதையும் முழுசாக கற்றுக்கொள்ள மாட்டாய். தவறு. தயவு செய்து ஏதேனும் ஒன்றை முழுமையாக கற்றுக்கொள். நிறைய புத்தகங்கள் படி.
பயணம் செய். பயணங்கள் தரும் அனுபவங்கள் வேறு எப்படியும் கிடைக்காது.
உறவுகளை கொஞ்சம் நேசி. நண்பர்கள் - இருப்பார்கள். உறவுகள் - எப்போதும் இருப்பார்கள். ரொம்பவும் நேர்மையாக இருக்காதே. பிழைக்கக் கற்றுக்கொள். முடிந்தவரை உதவி செய். எதையும் கற்றுக்கொள். மூச்சுத்திணரப் படி. திகட்டத் திகட்டக் காதலி ( ஒரு வேளை, காதலி அமைந்தால் :))..
இதையெல்லாம் என்னிடம் ஏன் சொல்கிறாய் என்று கேட்கிறாயா? உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும். உந்தன் திறன் எனக்குத் தெரியும். மேலும் என்னால் மட்டும்தான் உன்னிடம் இவைகளைச் சொல்ல முடியும்...
இதோ இந்தக் கடிதத்தை உன் அருகில் வைத்திருக்கிரேன்.. முடிந்தால் படி... புரிந்தால் நட...
ஒரு ரகசியம்: இன்று இரவு உனக்க்குப் பிடித்த தக்காளி கொத்சும் இட்லியும் தான் :)
இப்படிக்கு,12 வருடத்திற்குப் பிறகு,
கால நதியின் எதிர்காலத்தில் கல்லெரிந்துகொண்டும்... கடந்த காலத்தில் மீன் பிடித்துக்கொண்டும்..
நீ...