Saturday, May 2, 2015

உத்தம வில்லன் - விமர்சனம் | Uthama Villain | Uttama Villain Movie review.

(... pssst - created a Meme for the first time for a movie review! Meme at the end of the post.)

நான் மிகத்தீவிரமான கமல் ரசிகன். விஸ்வரூபம் விவகாரத்தில் கமலுக்கு காசோலை அனுப்ப எத்தனித்தவர்களில் நானும் ஒருவன். விஸ்வரூபம் படம் தமிழ் நாட்டில் ரிலீஸ் ஆகும் வரை வேறு எந்தப்படத்தையும் திரை அரங்குகளில் பார்க்காமல் ஒரே வாரத்தில் 4 முறை பார்த்தவன். 

... என்னைப்போல் பலர் உள்ளனர்.

சியாட்டிலில் நகரின் ராக்ஸி சினிமாவில் (Roxy Cinema) இன்றிரவு உத்தம வில்லன் படம் பார்த்தேன். ரமேஷ் அரவிந்த் இயக்கம், படம் மொக்கை என்று சில விமர்சனங்கள், தசாவதாரத்தை நினைவூட்டிய முன்னோட்டம் - இவை அனைத்தையும் தாண்டி கமல் மீதிருக்கும் நம்பிக்கையில் படம் பார்க்கச்சென்றேன். 

நான்கு ஆண்டிற்கு ஒருமுறை தன் ரசிகர்களை சோதித்துப் பார்ப்பதில் கமலுக்கு அலாதி பிரியம் போலும். மும்பை எக்ஸ்பிரஸ்சில் ஆரம்பித்த இந்த விஷப்பரீட்சை - மன்மதன் அம்பு, உன்னைப்போல் ஒருவன் என்று நீண்டு - இப்போது உத்தம வில்லனில் உச்சம் தொடுகிறது.

மனோரஞ்சன்ஒரு சூப்பர் ஸ்டார். அவருக்கு வாழ்க்கையில் அதி தீவிரமாக ஒரு பிரச்சனை. தான் முன் செய்த தவறுகளை திருத்திக்கொள்ளவும், நன்றி சொல்லவும், நன்றிக்கடன் செலுத்தவும், மன்னிப்பு கேட்கவும், மன்னி க்கவும் அவகாசம் இல்லாமல் போய்விடும் அவலம். அவற்றை எவ்வாறு சரி செய்கிறார் என்பதே கதை.

கதை சுருங்கக்கேட்க்கையில் நன்றாக இருகிறது. அனால் கமல் இதை விரிவு படுத்தி திரைக்கதையாய் வடித்த விதம் - கல்யாணப் பந்தியில் ஆசையாய் கேசரியை அள்ளி வாயில் வைக்கையில் இனிப்பதற்கு பதிலாக உப்புக்கைத்தால் எப்படி இருக்கும்? கஷ்டப்பட்டு ஒரு கரண்டி கேசரியை சாப்பிட்டு முடிக்கையில், நம்மை கேட்காமல் மேலும் நான்கைந்து கரண்டி உப்பு கேசரி பரிம்மாரப்பட்டால்? மிகவும் தெரிந்தவரின் கல்யாணம்.. சாப்பிட்டுத்தான் வர வேண்டும். என்ன செய்வீர்கள்? பிதுங்க பிதுங்க முழித்துக்கொண்டு சிரித்துக்கொண்டே சாப்பிட்டு எழுந்து வந்து - கேசரி எப்படி என்று வீட்டார் கேட்க்கையில் - 'முந்திரி சூப்பர்' என்று பதில் அளிப்பது போல் இருக்கிறது.

மனோரஞ்சன் தன குருவிற்கு நன்றிக்கடன் செலுத்த தான் நடிக்க இருக்கும் படத்தை அவரை இயக்க வைக்கிறார். அதுதான் திரைக்கதையில் இன்னொரு கதை. அதில் வரும் கமலின் பெயர் உத்தமன். மனோரஞ்சனின் மனத்தில் எழும் அச்சத்திற்கும் கேள்விகளுக்கும், உத்தமன் பதில் கூறுகிரார்ப்போல் திரைக்கதை. உத்தமனின் கதை காமெடிக்கதை. மனோரஞ்சனின் கதை tragedy கதை. இதில் உத்தமனின் காமெடிக்கு நாம் சிரிக்கவுமில்லை, மனோரஞ்சனின் சோகத்திற்கு அழவும் இல்லை. 


உத்தமனின் கதையில் - தெய்யம் நடனங்கள், பூஜா குமாரின் நடனம், ஞானசம்பந்தரின் "என்ன இருந்தாலும் இடது காது போல வருமா?" என்ற வசனம் - இவைதான் கேசரியின் முந்திரிகள். மற்றனைத்தும் உப்புதான்! 

கமலிடம் அவர் ரசிகர் பட்டாளம் தாழ்மையோடு கேட்டுக்கொள்வது - தயவு செய்து நகைச்சுவை எழுதாதீர்கள். மிகவும் மோசமான வசன நகைச்சுவை. இதில் slapstick வேறு முயன்றிருக்கிறார் கமல். கமலுக்கு வராத நடிப்பென்று ஒன்று இருப்பின் அது இதுவாகத்தான் இருக்கும்... 

மனோரஞ்சன் கதையில்  - ஊர்வசி அவரது மனைவி. அண்ட்ரியா - செட் அப். ஆங்கிலம் பேசும் பையன் (பைய்யனுக்கு அழ வரவில்லை என்று நினைக்கிறேன். ஒரு காட்சியில் முகத்தை மூடிக்கொண்டே அழ வைத்திருக்கிறார்கள்). ஊர்வசிக்கு முன்னால் இருந்த காதலிக்கு ஒரு பெண் குழந்தை ('பூ' பார்வதி), அவரின் வளர்ப்பு தந்தை ஜெயராம் - தெலுகு பேசும் மாமனார் (கே விஸ்வநாத்) மாமியார், கூடவே எம்.எஸ். பாஸ்கர். [அந்த முன்னாள் காதலியின் பெயர் யாமினி. இந்த பெயரை வைத்துக்கொண்டு யாம் இனி, யாமினி என்று வார்த்தை விளையாட்டு வேறு! ஐய்யோடா சாமி! - if I split this word into parts like Kamal - Ai! Yoda Saami! - If Star wars were dubbed in Tamil.. you get the point. கடுப்பாகுதுல்ல? லைக் லைக். சேம் சேம்.]

இவர்கள் அனைவரோடும் ஆளுக்கு ஒரு எமோஷனல் காட்சி இருக்கிறது. இவை எதுவுமே ஒட்டவில்லை. ஊர்வசியோடு மருத்துவமனையில் வரும் காட்சி பாஸ் மார்க். மற்ற அனைத்திலும் பொதுவாக ஈரம் இல்லை. 'க்ரேவ் டேஞ்சரில்' இருக்கும் மனோரஞ்சனின் மேல் நமக்கு அனுதாபம் வர வேண்டாமோ? சுத்தமாக வரவில்லை. "அன்பே சிவத்தின்" நல்லாவின் மேல் எவ்வளவு அபிமானம்/அனுதாபம் வந்தது? ஒரு வேளை அது மதனின் எழுத்தாலா? இருக்காலம்!

மீண்டும் கூறியாக வேண்டும் - படத்தின் பெரிய மைனஸ் - கமலின் எழுத்தும், திரைக்கதையும். படத்தில் ஒரு காட்சியில் மனோரஞ்சன் நடித்த ஒரு காட்சியை திரையில் ரஷ் பார்ப்பார்கள்.அப்போது மனோரஞ்சன் தூங்கிவிடுவார். எனக்கென்னவோ நிஜமாகவே கமல் தூங்கியிருப்பார் என்று தோன்றுகிறது. அவ்வளவு போர்!! 

வாழ்கை நிரந்தரமில்லை என்று படத்தில் கருத்து சொல்லும் கமலுக்கு -  தனது எழுத்துக் கூர்மை கூட நிரந்தரமில்லை என்று  யார் கூறுவார்??

இசை, ஒளிப்பதிவு நன்று. கமல் படத்தில் கிரீன் மேட் பிரயோகம் அப்பட்டமாக தெரிவது புதிதில்லை. இதுலும் சப்-ஸ்டாண்டர்ட் VFX. 

பாலச்சந்தரை கடைசியாக திரையில் பார்த்தது மட்டுமே மனதில் நிற்கிறது.

உத்தம வில்லன் - உத்தமனும் இல்லை. வில்லனும் இல்லை. அட! ஒரு எழவும் இல்லை! 

Created a Meme for Uththama Villain as part of the review! 


Monday, April 20, 2015

ஓகே கண்மணி - சப்பை மேட்டருக்கு சண்டை | OK Kanmani - Movie review

வெகு நாட்கள் ஆகிவிட்டது நன் blog எழுதி. வணக்கம் மக்களே... ஓகே கண்மணியோடு மீண்டும் riddikilus..

இந்நேரம் கதை அனைவருக்கும் தெரிந்திருக்கும். கதை - இல்லை என்பதே உண்மை. இருவர் பார்த்தவுடன் பழகுகிறார்கள்; மேலும் பழகுகிறார்கள், கல்யாணம் செய்து கொள்கிறார்கள். சுபம். 


படம் பார்த்தவுடன் 'அலைபாயுதே' மாதிரியான கிளர்ச்சி ஏதும் உண்டாக வில்லை. காதலில் ஆழமோ, பதபதைப்போ, ரகசியமோ, கண்ணாமூச்சியோ, சேர்வார்களா மாட்டார்களா போன்ற tension-ஓ  இல்லை. அதனாலேயே படம் அவ்வளவாக ஒட்டவில்லை. அனைவரும் கர்நாடிக் பாடுகிறார்கள், கேம் டெவலப்புகிரார்கள், பாடாவதி லாட்ஜு கூட அழகாய் இருக்கிறது, திரையில் வரும் அனைவரும் அம்சமாக இருக்கிறார்கள் - யாருக்கும் வேர்க்கக்கூட இல்லை - பிரகாஷ் ராஜ் தவிர; அனைவரும் நல்லவர்களாக, சிரித்துக்கொண்டே, சந்தோஷமாகஇருக்கும் - unidimensional கதாப்பாத்திரங்கள். ஓரளவிற்கு மேல் அலுப்பூட்டுகிறது. 

இரண்டாம் பாதியில் 'இனி 10 நாள் நாம சந்தோஷமா இருப்போம்' என்று சபதம் எடுக்கிறார்கள் ஹீரோ-வும் ஹீரோயின்னும். டிஸ்கோ போகிறார்கள், ஷாப்பிங் போகிறார்கள், பீச்சில் ரொம்பவும் கத்தி பேசுகிறார்கள்.. முடிவில் "இன்னும் 8 நாள் இருக்கு" என்கிறார்கள் - மேலும் கத்தி கத்தி நிறைய செய்கிறார்கள். "இன்னும் 6 நாள் இருக்கு" என்கிறார்கள். அலுப்பூட்டும் திரைக்கதை. வசனங்கள் பயங்கர மோசம். சுஜாதா விட்டுச்சென்ற இடத்தை இன்னும் தமிழ் திரை உலகம் ஏக்கத்துடன் பார்த்துக்கோடு மட்டும் இருக்கிறது.

இவ்வளவு இருந்தும் - படத்தை மொக்கை என்று ஒதுக்க முடியவில்லை. 

காரணம் ஒன்று:  

ரஹ்மான் / பி.சி. ஸ்ரீராம். உணர்வுப்பூர்வமான இசை, இதமான ஒளிப்பதிவு (Photography கொஞ்சம் படித்ததால் PCயின் ஒளிப்பதிவில், GND filter பயன்படுத்துவது தெரிந்தது. இதையே மற்றவர்களும் பின்பற்றலாம். ஏன் பற்றவில்லை என்று தெரியவில்லை. தவறாய் இருந்தால் மன்னிக்க). 

இது மட்டும் அல்ல, மணிரத்தினத்தின் அனைத்துப்படங்களுமே ஒளிப்பதிவின் உச்சங்கள். படங்களின்படிமங்கள் நம்முள் பதிந்துவிடும் தன்மை உடையவை. வண்ணங்களும் composition-களும் தரம் வாய்ந்தவை. நீங்கள் மௌன ராகம் நாட்களில் இருந்தே இதை கவனிக்க முடியும். ரேவதியின் விரக்தியான பார்வை, நாயகன் வேலுநாயக்கர் காட்சிகள், அஞ்சலி பாப்பா சுவற்றில் கை ஊன்றி வரும் காட்சி, தளபதி ரஜினி pose - இன்றும் பல இடங்களில் பார்க்க முடியும், ரோஜா திருநெல்வேலி, பம்பாய் - மீண்டும் திருநெல்வேலி, அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால் - உதாரணங்கள் ஏராளம். இந்தப்படத்திலும் அப்படிப்பட்ட காட்சி அமைப்புகள் நிறைய.ஒட்டிக்கொள்ளும் வண்ணங்கள். தங்கிவிடும் அழகு. அதனாலேயே படமே நம்முள் பாதிப்பு ஏற்படுதியதாய் உணர்வதை தவிர்க்க முடியாது.அனைத்தும் மாயம்.

காரணம் இரண்டு:

படத்தில் 'tension' இல்லை என்று கூறியிருந்தேன். கொஞ்சம் நிதானமாக யோசிக்கையில், இன்றைய அதி மேல்தட்டு காதல்கள் இவ்வாரே உள்ளது என்று தோன்றுகிறது. பெற்றவர்களின் அனுமதிக்காக பயம் இல்லை. 'Independent' என்கிறார்கள். காதலில் விழுவதே 'depend' ஆவதற்கு என்று உணர மறுக்கிறார்கள். பிரிந்தும் செல்கிறார்கள். அதில் ஏற்ப்படும் உளவியல்சேதங்களை தெரிந்தோ தெரியாமலோ ஏற்கிறார்கள். அவர்களின் அதிகபட்ச பிரச்சனை 'இன்னைக்கு என் friend முன்னாடி என்னை கிண்டல் பண்ணிட்ட. பேச மாட்டேன்' என்றோ 'ஏன் இன்னைக்கு chocolate வாங்கி தரலை' என்றோ அன்றே ஆரம்பித்து அப்போதே முடிந்துவிடும் சில்லறை கோபங்கள். 

அன்றைய 'லெட்டெர்' தவிப்போ, நேற்றைய SMS எதிர்பார்ப்போ இன்றைய காதலில் இல்லை. அனைவரும் அனைவரோடும் எப்போதும்  தொடர்பில் இருக்கிறார்கள். அவர்களின் நிஜக்காதல்களே பக்கோடா சாப்பிடுவதுபோல் சுலபமாக இருப்பதால் திரையிலும் அவ்வாறே இருப்பது ஆச்சர்யம் இல்லை.

சின்ன விஷயங்களில் சுவாரஸ்யம் இல்லாமல் போனதால் பெரிய விஷயங்களில் சுவாரஸ்யப்படுத்திக்கொள்கிரார்கள். பெரும்பாலும் அவை விபரீதமாகவே முடிகிறது. உம்: 'ஆதலால் காதல் செய்வீர்'. 

காரணம் மூன்று:

இறுதியாக - துல்கர் சல்மான் தன் வாயில் இருக்கும் ஹேங்கரை கழட்டி வைத்துவிட்டு கொஞ்சம்இயல்பாக நடித்தால் தேவலை. அடுத்த 'மேடி' என்று கூறுவதெல்லாம் டூ மச். நித்யா மேனன் மிக மிக அருமை. இருவரும் நிறைவாகவே நடித்திருக்கிறார்கள். 

ஓகே கண்மணி - மேட்டரை சப்பை ஆக்கிவிட்டு, சப்பை மேட்டருக்கு சண்டை போடுகிறார்கள். இந்தபடத்தை பாத்துட்டு நான் பறந்தேன், மெதந்தேன்னு சொல்றதெல்லாம் சுஜாதா சொல்றது மாதிரி 'சும்மா உள்ளுள்ளாய்'

Wednesday, February 4, 2015

Some really smaaal stories IV

இதற்க்கு முன் - சிறிய சிறு கதை தொகுப்பு 

சிறிய சிறு கதைகள்  IV 
=======================

இம்முறை தமிழில்..

உறக்கம் 
----------------



இப்போதெல்லாம் நான் தூங்குவதே இல்லை. ஆனால் தின்னும் கண் விழிக்கிறேன்.

பிம்பம் 
------------
கண்ணாடியில், என் பிம்பம் கண் சிமிட்டியத்தைப் பார்த்தேன்!!

செல்ஃபி 
---------------
ஒரு நாள் நான் உறங்கும்போது எடுத்த புகைப்படம் ஒன்று எனது அலைபேசியில் இருந்தது. நான் என் வீட்டில் தனியாக வசிக்கிறேன்.

தொடரும்...

Friday, May 30, 2014

கவிதை அல்ல.. ஆக்கிக்கொள்ளலாம்... - 22

"ஆணா? பெண்ணா?"

"எந்த ஸ்கூல்?"

"எத்தனையாவது ரேங்க்?"

"இன்ஜினியரிங்கா? மெடிக்கலா?"

"அதுக்குள்ள வேலைக்கு போயிட்டானா?"

"நல்ல சம்பந்தம் வந்துருக்கு.. பேசாம கல்யாணத்த முடிச்சுட வேண்டியதுதான்.."

"பலே! பலே! அப்பா ஆகிட்ட! பொறுப்பு ஜாஸ்தி ஆகிடுச்சு!!"




"உடம்பு எப்படி இருக்கு?"

"Rice completeஆ விட்ருங்க.. சரிங்களா? "

":அடடா., போன மாசம் வரைக்கும் நல்லாத்தான் இருந்தாரு.. திடீர்னு இப்படி ஆகிடுச்சே!"

---------

கேள்விகளுக்குள் சிக்கித்தவிக்கும் வாழ்க்கை..

--------

Thursday, May 22, 2014

Its still alive...

listen carefully...


shhhh...


Lub Dub..Lub Dub..Lub Dub...Lub Dub..Lub Dub..Lub Dub...





Saturday, September 7, 2013

கவிதை அல்ல.. ஆக்கிக்கொள்ளலாம்... - 21

எல்லா அம்மாக்களுக்கும் 
எட்டிவிடுகிறது நிலவு,
தன் குழந்தைக்கு உணவூட்ட..

நேற்று உண்ட நிலவை 
இட்லியென்றொ, 
தச்சி மம்மு என்றோ, 
லாக்டோஜன் என்றோ,


உணரும் தருணம் 
தொலைந்து விடுகிறது - நிலவோடு சேர்ந்து 
குழந்தையும்..

அம்மாக்களுக்கு மட்டும்,
எப்போதும் நிலவு,
எட்டிவிடும் தூரத்தில்..

Wednesday, September 4, 2013

கவிதை அல்ல.. ஆக்கிக்கொள்ளலாம்... - 20


சுடும் வெயிலை
சகித்துக்கொள்ளலாம் 

கொட்டும் மழையில் 
நனைந்தும் விடலாம்..

இந்த பாழாய்ப்போன 
தூரலைத்தான் 
என்ன செய்ய? தெரியவில்லை..