Showing posts with label Love. Show all posts
Showing posts with label Love. Show all posts

Thursday, June 29, 2017

கவிதை அல்ல.. ஆக்கிக்கொள்ளலாம் - 26

ஓரக்கண்ணால் பார்த்தபடி 
ஒன்றரை மாதம்..

ஒருவழியாக தைரியம் சேர்த்து - 
ஒரு மழை மாலையில், தன் காதலை 
ஒப்படைத்தாள் 
ஒருத்தனிடம்..

ஓட்டை பேருந்து நிலையத்தில்,
ஓரடி தூரத்தில் நான்..

ஒன்று சேர்ந்தார்களா?
ஒதுங்கி வாழ்ந்தார்களா?


---

கான்க்ரீட் சுவர் தாண்டி,
குட்டிச்சிறுவன் ஒருவன் - முதன்முதலாய் 
கால் நனைக்க வருகிறான்..

கடலின் மொத்த அழகையும் 
கவிதையாய் கடைந்தெடுத்து - அவன் 
காலடியில் கொட்டுகிறது  - அலை.

கால்களோடு கண்களும் நனைய 
காற்றோடு கலந்தது அவன் சிரிப்பு..

கடலை மென்றபடி, 
காத தூரத்தில் நான்..

Image result for besant nagar beach

---

அலுவல்கள் முடித்த 
ஆண்களும் பெண்களும் - வீட்டின் 
அன்றாடங்களை நோக்கும் மாலை ரயில்ப்பயணம்..
அவரவர் வசதிக்கேற்ப  சிறிது பெரிதென; பவுடர்கள் பழுதடைந்த 
அக்குள் வட்டங்கள்..

ஜன்னலோரம் அவள், 
கண்களோரம் கண்ணீர்...
காரணம் கேட்க வக்கில்லாமல் அருகில் நான்...

இடம் வந்ததும் 
இறங்கிச்சென்றாள். 

இமைகள் உலர்ந்ததா?
இனிமை மலர்ந்ததா? 

இன்று வரை பதில் தெரியாமல். நான்..

---

கடிதம் கொடுத்தவளிடம் 
கை குலுக்கி, "வாழ்த்துக்கள்" சொன்னதாகவும்,

கடல் சிறுவனோடு 
மணல் வீடு கட்டியதாகவும்,

கண்ணீர் குமரியிடம் 
ஆறுதல் கூறியதாகவும் 

சாலையை கடக்கையில், என்னை நானே 
சமாதானப்படுத்தி
சிரித்துக்கொண்டேன்..

---  x ---

எஷ்ட்ரா ஷ்பீடா  ஓட்ட சொல்ல,
யார்ரா இது எரும மாடு மாதிரி?..

"சோப்பு கலர்
சிக்னல் கண்ணுக்கு தெர்ல?" - நடூ ரோட்டுல
சிரிச்சுகினே போவுது பாரு 
சாவு கிராக்கி!

---  x ---

Monday, July 16, 2012

25 things I learnt in 25 years




So here I am starting my manhood without the world noticing (July 15th saw me turn twenty five). Yet another 25-something person who goes to work, pays rent on time (most of the time),loves watching movies, doubts the existence of god, open to almost everything, listens, recently lost interest in wearing watches and grown interest in tub-baths.


Having lived all these years and being touched by so many lives, I have learnt few things.Few trivial bits of learning that made me. Some of these took me 3 minutes to learn while most of them took from 2-24 years!


As every fervent blogger does, Im jotting down all those little things which I have learnt through life. Few of this could be preachy, few dumb and few others, really really dumb. But all is said with good heart. I dont know if I should number it. But still I did, just to keep count. If you want to rank it that way, it won't make much sense I tell you.


If the word ‘you’ ever appears in this list of learning, please rest assured that I am referring to myself.  I’m still learning… you, surely, are good as gold. 







1. No one can really hold a secret! NEVER EVER! So if you want to confide in a person, please know so that your little secret is out and you might find it in a piece of paper that you use to squeeze out the oil in bajji in the roadside stalls. And if they do keep a secret, they are crazy. Please don't be friends with them!


2. Having said that, please have a person to whom you can confide to. It is not necessary that you will have to confide everything to the same person. They have their own lives to take care. Pick and choose your friends,family to confide. This will keep you sane!


3.The one thing that unites all human beings, regardless of age, gender, religion, economic status, or ethnic background, is that, deep down inside, we all believe that we are above-average drivers. 


4. Nobody is normal. 


5. A person who is nice to you and rude to the waiter, is not a nice person.


6. No matter what happens, somebody will find a way to take it too seriously. You can most likely ignore them.


7. If you are 25 and have not lived atleast a year outside your home, without your parents, your life is screwed! Big time!


8. You are not inherently patient. Its always a work in progress!


9.It’s okay to fall apart for a little while.  You don’t always have to pretend to be strong, and there is no need to constantly prove that everything is going well.  You shouldn’t be concerned with what other people are thinking either – cry if you need to – it’s healthy to shed your tears.  The sooner you do, the sooner you will be able to smile again. And if you find yourself uninspired, watch a TED talk. It helps tremendously!

Example:  Brené Brown's TED Talk on The power of vulnerability
             
                 





10. The happiest people I know keep an open mind to new ideas and ventures, love good music, good books, good pictures, good company and good conversation.  And oftentimes they are also the cause of happiness in others – me in particular. Don’t become too tied to a type.  Visit a plethora of places, read different genres of books, interact with a variety of people, listen to music you think you might hate.  What you will learn will enrich your life, even if you didn’t enjoy the experience.


11. You are always judged, there is no escape!


12. Apologize sincerely. You will always be forgiven. People are good. But... don't be too late! They expect you to be good too.


13. Those little things in life, there's nothing bigger.  Sometimes the moment that mean the most to you are not the big planned events, but the small things that happen when you least expect it.  Take care to not miss those. Like how my room mate cut a little cheesecake for my birthday. It was just me and him.. But it was happiness nevertheless!


14. There can't be a better gangster movie than 'The Godfather'. And please watch Inception as many times as possible! :)


                        


15. Negative people can not make you happy.  If you cannot help them turn their attitude around they will probably turn you.


16. You most likely never end up doing what you want... but realize its always too early to give up on your dreams.


17. Saving money is a pain in the ass! When you have money, your car eventually breaks down!


18. If you make a choice, don't regret after having made the choice! Believe me, that has kept me sane for all these years!


19. A guy and a girl can never be just friends, unless one of them is already committed..  Two girls can just never be friends.. unless they are equally jealous of each other - or equally dumb! 7 guys can live cordially in a two bedroom apartment, not matter what!


20. If there is a beginning, there is an end. And at the end, you are left with nothing but memories. Make good memories!


21. Pain is good, suffering is optional and change is inevitable!


22. Nobody accepts you, as you are, except your parents.






23. If electrical/electronics appliances are not working, turning it off then on again is a good way to fix it. Especially if its an Apple product!


24. If a person wants to be a part of your life they will make an obvious effort to do so.  Don’t bother reserving a space in your heart for people who do not make an effort to stay. Simply put - Your friends will be there and love you anyways.


25. Nothing really matters!

...... well, I do have lot more to share.. but this is enough I guess. Thanks for your wishes guys. It was a very humble birthday that I had yesterday. Thanks again.


PS: Sorry if I had not picked up your call. My cell phone is messed up!



Wednesday, July 4, 2012

Why is it so terrible and why it is still important to go on?


   To-morrow, and to-morrow, and to-morrow, 

   Creeps in this petty pace from day to day 

   To the last syllable of recorded time, 

   And all our yesterdays have lighted fools 

   The way to dusty death. Out, out, brief candle! 
   Life's but a walking shadow, a poor player 
   That struts and frets his hour upon the stage 
   And then is heard no more: it is a tale 
   Told by an idiot, full of sound and fury, 
   Signifying nothing.


I so happened to read this piece of poetry from Macbeth, Shakespeare. Before I blabber on with whats in my mind, I should explain what this means to you. I know its a bit straight forward piece of poetry on setting the scales with Shakespeare's entire work. But still...


Each day creeps after another in some trivial way (life is meaningless) and time in all its details, is being noted down, ready for Judgement Day. Our past has done nothing but show fools the way to death. Life is a brief candle. Life has no importance, since it is a shadow.

Life makes no impression, just like the inadequate actor who spends but a short time on stage and then disappears, making no impact. Life is but transient. It is only a story told by a fool, full of sounds and fury but means nothing. 



Basically the soliloquy is well-known for its despondence at life. At this point of time, in the novel, it matters not to Macbeth whether he lives or not. "Life is meaningless" will be the shortest translation of this soliloquy. 

Now I have a question to you all.. is it just me or every one conscious about this? Speaking for myself, I got this clarity at around 18 and it becomes increasingly more evident as you  get older. 

When I was younger than what I am now, I had a feeling that how important everything is and how things have to go right - your job, your career, your choices and all that. And then after a while, you start to realize that, its just can't be perfect... its Ok to make mistakes its Ok to go wrong and (- taking the big picture here -) eventually we die!.. Eventually the sun burns out and the earth is gone ..all the stars and all the planets in the universe goes away - disappears and nothing is left at all!.. no Mozart .. no Shakespeare.. no Sujatha.. no Ilayaraja..no Vairamuthu..no Nolan.. No Allen.. no Rahman..no Kamal.. no beaches..parks..temples..theatres..office..traffic jam.. No wars.. no peace.. no economy..Its just an empty space.

And when you start to think about it, the words of Shakespeare - makes absolute sense - 


Told by an idiot, full of sound and fury, 

   Signifying nothing.

Its just going down! 

When you think about it, its just happening over and over again! - Every hundred years, the people on earth is flushed down and earth is left with a whole new set of people - all the Indians, Americans, Hindus, Muslims, Christians, the rulers, every person who is making our lives miserable and happy - are replaced - in the next hundred years. But every set, goes through the same worry, anxiousness and rage!

So it seem like a big meaningless thing.

But, you can't actually live your life like that. Can you? Because if you do, you just sit there and wait for your death. Why do anything, why get up in the morning and do anything? Finally it comes down to this question - why live and whats the meaning of existence? 

It differs for every individual. For those among us who is devoid of any basic amenities in life - acquiring them could only be their drive to live. Sad as it is, that can't be denied. They can't (and should not) have all these nonsensical thoughts. But for people like us - to those we know that the food and shelter are guaranteed, is it not our duty to try and figure out, why given this terrible fact, this meaningless end of everything, do you want to go on living? What and why do you care about anything?






Don't we have the responsibility to try and find, knowing the truth, knowing the worst, not giving ourselves a fake heaven and hell nonsense, why life is still worthwhile!? That IS a tough assignment even to explain to somebody who's primary concern is - for instance - their salary, their food, their promotion, their credit scores, their car, the worry about how to face the society, the social status and its own evils - and many many MANY other trivial things. At times, yes,even I am concerned. That is vital for survival.. not for existence! We are not cockroaches, right?


 I wont deny some survival necessities... but I do that knowing that I am growing. I don't see in most of us even the slightest clue of growing up.. even in grown men/women!

By this time should we not have come out of our boxes and be open? Why is still for most of us, the most trivial things are of concern? Shouldn't we have evolved by now?

I realize this is the single most abstract post I have ever written and I know its not coherent enough and all the questions are debatable and open ended. For most of them, there is no answers. But if you have not given a thought about why existence itself is so terrible and why is it still important to give it a shot... please do. It is essential Because we are living in our own hallucination of reality!


Thanks!


Reflecting this anger of Shakespeare, It is interesting to know our own Mahakavi has the answer for that...







உண்மை யறிந்தவர் உன்னைக் கணிப்பாரோ?
மாயையே-மனத்
திண்மையுள்ளாரை நீ செய்வது
மொன்றுண்டோ !-மாயையே! 

எத்தனை கோடி படைகொண்டு வந்தாலும்
மாயையே-நீ
சித்தத் தெளிவெனுந் தீயின்முன்
நிற்பாயோ?-மாயையே! 

என்னைக் கெடுப்பதற் கெண்ணமுற்றாய்
கெட்ட மாயையே!-நான்
உன்னைக் கெடுப்ப துறுதியென்
றேயுணர்-மாயையே! 

சாகத் துணியிற் சமுத்திர மெம்மட்டு
மாயையே!-இந்தத்
தேகம் பொய் யென்றுணார் தீரரை யென்
செய்வாய்!-மாயையே! 

- மகாகவி பாரதியார்

Having blabbered everything and put all the questions forth, now its the time for the last one.. Is Bharathiyar greater than  Shakespeare ? :)

Tuesday, February 21, 2012

கவிதை அல்ல.. ஆக்கிக்கொள்ளலாம்... 6






அதிகமாக வாய்பேசுபவர்களை 
வாயாடி எனலாம்!

அதிகமாக கண்-பேசும் 
உன்னை கண்ணாடி
என்றா கூறுவது?!

-- பாரதி --


Wednesday, February 15, 2012

Best Tamil Romantic movies.. Feb 14, 2012

Have you ever snuck into your blanket with a bowl of popcorn, a box of tissues and a bunch of your favourite romantic movies? Have you ever cried your heart out over a broken love story? And most importantly – Have you ever wished your life was a movie where you knew that no matter what happens, there will always be a happily ever after?

Well, I have. And this Valentine’s Day I intend to do justice to those good movies, when love is still in the air.


But how long are we going to cling on to When Harry met Sallys, The Notebooks,Roman holidays and Forrest Gumps? Aren't we good enough to make nice romance movies, just Indian, in Tamil? 






When I thought about it, I just ended up with very few good Tamil movies which passes (in my own judgement) as romantic ones, which do not take the matter too seriously (eg: Gunaa). Many are overly melodramatic (Athu oru kanaa kaalam, Kaadal), overly red-ink-kakking (Vazhve maayam, Vasantha Maligai - see vas.maligai link) ones. Instead of feeling good about it, I usually end up being confused thinking about these movies. 

I just don't know people can take something like this seriously: "Nee whisky-a thaana kudikka vendam nu solliruka? Veshaththa illayemmaaa!" 



So I thought of polling it out with you guys. I have made a list of 20 movies which passed my threshold of good romantic (love) movies. Please poll for the Best Romance in Tamil Cinema for the sake of Tamil Cinema and me!


You can choose top three from the list and can also add your own choice, if you felt that I have missed something here.




And one more poll to choose the Best worst Tamil romantic movie. You have only one choice here.


Happy Valentine's day folks!

Tuesday, February 14, 2012

காதலிலே ரெண்டு வகை! (சைவம், அசைவம் அல்ல!)


சுஜாதா








பிப்ரவரி 14ஐ உலகமே காதலர் தினமாகக் கொண்டாடும்போது, ஆஸ்திரேலியாவில் அதை நூலக தினமாகக் கொண்டாட விரும்புகிறார்கள். நூலக நேசர்கள் ஏறக்குறைய காதலர்கள் போலத்தான்... நூலகத்தைப் பார்த்துவிட்டால் சோறு, தண்ணீர் வேண்டாம்! இவர்கள், காதலர்கள் இரண்டு தரப்பினருக்கும் சேர்த்து பிப்ரவரி 14ஐ 'நூலகத்தில் காதல் செய்வோர்' தினமாகக் கருதலாம் என்று தோன்றுகிறது. 'உலகமே காதலரைக் காதலிக்கிறது' என்கிறார் ஷேக்ஸ்பியர். மற்ற வீட்டுக் காதலர்களையும் திரைப்படக் காதலர்களையும் நாம் நேசிக்கையில், அதே காதல் நம் வீட்டுக்குள் கால் வைத்துவிட்டால் விரட்டாத பெற்றோரே இல்லை. இதற்குக் காரணம், பிள்ளைகளின் மேல் அதிக எதிர்பார்ப்பும், அவரவர் தவறவிட்ட சந்தர்ப்பங்களும்தான் என்பது, யோசித்தால் புரியும்.

காதல் பற்றி என் நண்பர் ஒருவர் பி.ஹெச்டி. அளவுக்கு ஆராய்ச்சி செய்து, புத்தகமே எழுதியிருக்கிறார். 'ஆதலினால் காதல் செய்வீர்' என்று நான் ஒரு நாவலுக்குத் தலைப்புக் கொடுப்பதற்கு முன்பே, அதே தலைப்பில் புத்தகம் எழுதிவிட்டார். காதல் எப்படி நம் உலகத்துக்கு அவசியமானது, இனவிருத்திக்கும் முக்கியமாக இன வேறுபாட்டுக்கும் அவசியமானது என்பதை ஆராய்ந்து எழுதியிருந்தார். சிவப்பான பெண்கள் கறுப்பான ஆண்களை விரும்புவதும், கட்டுப்பாடு உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வேற்று சாதியிலோ மதத்திலோ காதல் செய்வதையும் மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியின் ஓர் அங்கமாகக் குறிப்பிட்டு இருந்தார். இயற்கை மேம்பாட்டை, மாறுதலை நாடுவதன் அறிகுறி என்று அற்புதமாக எழுதியிருந்தார். அவரது மகள்தான் ஆராய்ச்சிக் குறிப்புகளைப் படி யெடுத்து, புத்தகமாக அச்சடிக்க ஃபாரம் ஃபாரமாக புரூஃப் திருத்திக் கொடுத்து வந்தாள்.
ஒரு நாள் அந்த மகள், 'அன்புள்ள அப்பா, நான் செந்திலை மணந்துகொண்டுவிட்டேன். ஆசீர்வதியுங்கள்' என்று கடிதம் எழுதி, பெங்களூருவிலிருந்து போட்டோ அனுப்பியிருந்தாள். 

ஒரே மகள்! செந்தில், அச்சாபீஸில் எடுபிடி வேலை செய்து வந்த இளைஞன். காதலுக்குச் சாதி இல்லை. இப்போது பேராசிரியர், காதல் பற்றிப் புத்தகங்கள் எழுதுவதை நிறுத்திவிட்டார். சுய முன்னேற்றப் புத்தகங்கள் எழுதி வருகிறார். 'உன்னை நீ அறிந்துகொள்!', 'செயல்படு... சிறைப்படாதே!' போன்ற டைட்டில்களில் இந்தப் புத்தகங்கள் குறுகிய காலத்தில் நான்கைந்து பதிப்புகள் கண்டிருக்கின்றன.

என் அனுபவத்தில், இத்தனை வருஷங்களில் காதலுக்கு இரண்டு உதாரணங்கள் பார்த்திருக்கிறேன். என்னுடன் எம்.ஐ.டியில் படித்த சக மாணவன் அழகாக இருப்பான்; படிப்பு வராது. நல்ல கிரிக்கெட் ஆட்டக்காரன். பரீட்சையில் அநியாயத்துக்குக் காப்பி அடிப்பான். என்னுடன் பரீட்சை சமயத்தில் குரூப் ஸ்டடிக்கு வந்து முக்கியமான கேள்விகளுக்கு பிட் எழுதிக் கொள்வான். தனக்கு வந்த காதல் கடிதங்களையெல்லாம் என்னிடம் காட்டுவான். அவன் வசித்து வந்தது ஒரு முன்னறையில். அந்த வீட்டில் இருந்த ஒரு பெண், அவனது அறையின் ஜன்னலோரத்தில் தினம் காதல் கடிதம் வைத்துவிட்டுச் செல்லும். ரொம்ப அந்தரங்கமாக, பெயர் போடாமல் எழுதியிருக்கும். அந்தக் கடிதங்களையெல்லாம் அவன் கேலி செய்வான். எங்களிடம் இரைந்து படித்துக் காட்டுவான். 'அந்தப் பெண்ணை என்னடா செய்யப் போகிறாய்?' என்ற கேட்டபோது, 'கழட்டிவிட வேண்டியதுதான்' என்றான் அலட்சியமாக! 'துரோகி, பாதகா' என்று திட்டினால், 'நீ வேற! எனக்கு முன்னாடி இந்த ரூம்ல இருந்தவனுக்கும், இவ இதே மாதிரி கடிதம் எழுதியிருக்கா. வேற வேலையில்லை இவளுக்கு!' என்றான். இது ஒரு வகை கழற்றிவிடப்பட்ட காதல்.

மீனம்பாக்கம் விமான நிலையத்தில், விமான போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரியாகப் பணிபுரிந்தபோது, எனக்குக் கல்யாணமாகியிருக்கவில்லை. என்னுடன் டியூட்டியில், கம்யூனிகேஷன் ஆபீஸராக இருந்தவர் ஓர் ஆங்கிலோ இந்தியர். அவர் பெயர் ஹார்ட்லஸ். இருவரும் நைட் டியூட்டி பார்ப்போம். என்னைவிட வயதில் மூத்தவர். செம்பட்டைத் தலையும், பச்சைக் கண்களும், அழகான கையெழுத்துமாக, ராத்திரி டியூட்டியில் தூங்கவே மாட்டார். 'சின்னப் பையன், புதிதாகச் சேர்ந்திருக்கிறான்' என்று என் மேல் வாத்சல்யம் காட்டினார். தான் ஏன் கல்யாணம் செய்துகொள்ளவில்லை என்று ஒரு நாள் சொன்னார். அவர் காதலித்த பெண் திருமணம் வரை, கிட்டத்தட்ட சர்ச் வாசல் வரை வந்துவிட்டு, கடைசி நிமிஷத்தில் திடீர் என்று மனம் மாறி, ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த ஒருவனைக் கல்யாணம் செய்துகொண்டு, அந்தத் தேசத்துக்குப் பறந்து போய்விட்டாளாம். அதனால், ஹார்ட்லஸ் கல்யாணமே செய்துகொள்ளவில்லை. அந்தப் பெண் ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆகி, நாலைந்து பிள்ளைகள் பெற்றுக்கொண்டு, கணவனை இழந்து திரும்ப பல்லாவரம் வந்துவிட்டாள். ஹார்ட்லஸ் தன் ஐம்பத்து நாலாவது வயதில் அவளைக் கல்யாணம் செய்துகொண்டு, மற்றவனுக்கு அவள் பெற்ற பிள்ளைகளைத் தன் பிள்ளைகள் போலப் பாவித்து, அவர்களின் காலேஜ் அட்மிஷனுக்காக அலைந்துகொண்டு இருந்தார்.

காதலித்துவிட்டுக் காணாமல் போய்விடுபவர்களும் உண்டு; கடைசி வரையில் மறக்காமல் காத்திருப்பவர்களும் உண்டு!

* ஆனந்த விகடன் 13-02-08

Sunday, January 8, 2012

ஆசைகள்

சார், ஒரு சலனமற்ற மாலை வேளையில் என் அறையின் ஜன்னலோரம் அமர்ந்து இந்தக்கதையை எழுத ஆரம்பித்தேன்.

"வணக்கம் வாசகரே. ஒரு மாலையின் ஆரம்ப வேளையில் என் அறையின் ஜன்னலோரம் அமர்ந்து இந்தக்கதையை எழுத ஆரம்பித்தேன்.

"ரம்யா அழகானவள். அவள் ரம்யவாகவே இருப்பதால்தான் அழகோ என்னவோ. தெரியவில்லை. பத்திரிகை போடோகிராபர். ஆனால் இப்போது தன் உயிருக்காக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில் அவளை மேலும் வர்ணித்து உங்கள் டெஸ்டோஸ்டிரோன்களின் சாபத்திற்கு ஆளாக விரும்பவில்லை. இது அட்ரினலின் தருணம்.

அவள் சற்று நேரத்திற்கு முன்பு எடுத்த போட்டோ, சில பெரிய்ய தலைகளுக்கு தலைவலி குடுக்கக்கூடியவை. அவள் துறைமுகத்தில் எதோ கடத்தல் நடப்பதைப்பற்றி அறிந்த... 'டுமீல்'.. கொஞ்சம் பொறுங்கள். மேலும் விபரம் பிறகு கூறிகிறேன். அவளை சுட முயற்ச்சிக்கிறார்கள்... 'டுமீல்'... மீண்டும் காதடைக்கும் சத்தம்.

இருட்டு. குறுகிய சந்துகளில் ஓடிக்கொண்டிருக்கிறாள் ரம்யா. 'எங்காவது மறைந்துகொள்ள இடம் கிடைக்காதா?' விடுக்கென்று இடதுபக்கம் இருந்த சந்து ஒன்றில் திரும்பினாள் . பிறகு வலது. வலது. இடது. பின்னால் பார்த்தாள். அவர்களை தொலைத்து விட்டேனா? சூப்பர். இல்லை. எதோ குரல் கேட்கிறது.

'நல்லா பாத்தியா? போயிட்டாளா? செக் பண்ணுங்கடா' என்று அதட்டியது ஒரு குரல்.

தப்பிக்க தருணம் இதுதான். சுற்று முற்று பார்த்தாள். அவள் இப்போது வந்தது ஒரு முட்டுச்சந்து. 'Damn!'. தெரு முனையில் ஒரு வீட்டில் இருந்து வெளிச்சம் வந்தது. 'இந்த நேரத்தில் யார் விழித்திரிக்கிரார்கள்?' வீட்டின் கதவு திறந்திருந்தது. விநோதமாக இருந்தாலும் இதுதான் தருணம். தப்பிக்க வேண்டும். விருட்டென்று உள்ளே சென்றாள்.

உள்ளே சென்று கதவை தன் பின்பக்கம் மூடிக்கொண்டாள். திரும்பி, முதல் முறையாக அந்த வீட்டை கவனித்தாள். வினோதமான வீடு. பெரிய்ய ஹால். அவ்வளவுதான் வீடே. பின் சுவற்றில் ஒரு கதவு இருந்தது. அதன் இடுக்குகளில் இருந்து வெளீரென்று வெளிச்சம் கட்டுப்பாட்டுடன் சிந்தியது. அவ்வளவு பெரிய்ய ஹாலும் மிக நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. இன்று பூத்த, இன்னும் வாடாத பூக்கள், மர வேலைப்பாடுகள், விஸ்தாரமான இருக்கை...ஓ! அதில் யாரோ அந்தக்கதவை நோக்கி உட்கார்ந்திருந்தார்கள். ரம்யா மெல்ல அவர்கள் அருகில் சென்றாள். பக்கவாட்டாக அந்த சோபாவை கடந்து முன்னாள் வந்தாள். தேநீர் கோப்பையுடன் ஒரு கிழவி.

"வாம்மா.." என்றாள்

"என்ன?!" , ரம்யாவிற்கு இந்த இடம், சூழல், கிழவி, எல்லாம் விநோதமாக இருந்தது. 'பின்ஜாம வேளையில் ஒருத்தி வீட்டிற்க்குள் நுழைந்தால், தேநீருடன், வாம்மா என்று வரவேற்ப்பார்களா என்ன?. முன் பின் அப்படி சென்றதில்லை நான்' என்று நகைத்துக்கொண்டாள்.

"உன்னைத்தான் எதிர்பாத்துட்டு இருக்கேன்."

அரை முழுவதும் பரவி இருந்த சன்னமான குளிர் அவளை மேலும் அசௌகரியப்படுத்தியது.

"என்ன?! come again!?"

"உன்னைத்தான் எதிர்பாத்துட்டு இருக்கேன்." , கிழவி.

"என்னயா?"

"உட்காரும்மா.. டீ குடி.. இளைப்பாரு"

விநோதங்களை உதறி விட்டு - "விளையாடாதிங்க பாட்டி. என்னை சிலர் துரத்திட்டு வர்றாங்க. நான் தப்பிக்கணும். பின் பக்கம் ஏதாவது வழி இருந்தா சொல்லுங்க.. நான் போய்டறேன்.", என்றாள்.

"கவலைப்படாதே. அவர்கள் உன்னை துரத்த மாட்டார்கள்."

"பாட்டி உங்களுக்கு சொன்ன புரியாது. நான் ஒரு பத்திரிகை போட்டோகிராபர். நான் இன்னை.." என்று கூறியவாரே தன் கமெராவை அனிச்சையாக எடுக்க முயன்றாள். காணவில்லை!!

"ஓடி வருகையில் விழுந்திருக்குமோ?" என்றெண்ணி, கேமராவை தேட வெளிய ஓடத்துவங்கினால்.

"இதைத்தான தேடற?" என்றாள் பாட்டி.

சட்டென்று நின்று திரும்பி, 'ஆமாம்!'... "எப்படி உங்களுக்கு கிடைத்தது" என்றாள் திகைப்புடன்.

"உட்கார். டீ குடி. சொல்றேன்."

"ஐயோ! உங்களுக்கு ஏன் புரிய மாட்டேங்குது.. என்னை சிலர் துறத்.." என்று அவள் கூறும்போதே, கிழவி இவளை உற்றுப்பார்த்தாள். கண்கள் விரிய, பெரிய போட்டு, வெள்ளை முடி, சுருங்கிய உடல். கொஞ்சம் பயந்துதான் போனாள் ரம்யா. அமர்ந்தாள். அருமையான டீ.

"உன்னை அதோ தெரிகிறதே. அந்த கதவு வழியாகத்தான் அனுப்பப்போகிறேன்." என்று அந்த வெளீர் இடுக்கு கதவை காண்பித்தாள்.

"தேங்க்ஸ் பாட்டி."

"தேநீர் சுடுகிறதா?" என்றாள்.

"இல்லை பாட்டி. நல்லா இருக்கு. ஆனா சுடலை. சூடா இருந்த இன்னும் சூப்பரா இருந்துருக்கும்."

"இனி சுடாது."

"ம்ம்ம்?" என்றாள் டீ சிப்பிய படி, கோப்பைக்குள்.

நகைத்துவிட்டு, "சரி. உனக்கு நிறைவேறாத ஆசைகள் ஏதும் இருக்கா?"

ரம்யாவிற்கு ஒன்றும் புரியவில்லை. அவள் பார்வையும் அதையே சொன்னது.

"உனக்கு உன் தாத்தாவை பார்க்க வேண்டுமா?"

"என்ன பாட்டி கேட்கறிங்க. அவர் இறந்து போய் பல வர்ஷம் ஆச்சு. இப்போ எப்படி?"

"நீ இறந்து போய் இருபது நிமிஷம் ஆச்சு."

"ஹா..ஹா.. என்ன பாட்டி, நீங்க பாலா படத்துல வர்ற சாமியார் மாதிரியா?. கஞ்சா கிஞ்சா அடிச்சுருக்கிங்களா?"

"இல்லை. உன்னை ஒரு தோட்டா துளைத்து இறந்துவிட்டாய். மார்பில் ரத்தக்கறை இருக்கும் பார்."

இருந்தது.

"அது நான் ஓடி வந்தப்போ நிறைய இடத்துல அடி பட்டுது. அதுல ஒண்ணா இருக்கும்."

"நம்புவதற்கு கடினம்தான். இது ஆன்மாக்களின் உலகம். கொச்சையாக சொல்லவேண்டும் என்றால் ஆவிகள் உலகம். வந்தனம்"

"பாட்டி. தயவுசெய்து விளையாடாதீங்க."

"உனது நிறைவேறாத ஆசைகள்தான் உன்னை இங்கு கொண்டு வந்திருக்கிறது. அது நிறைவு பெற்றவுடன் நீ இங்கிருந்து விடுதலை அடைவாய். சிலருக்கு நிறைவேறாமலே போய்விடும். அவர்கள் ஆவிகளாகவே இருப்பார்கள். உனது ஆசைதான் என்னென்ன?"

"ஹலோ.. பட்டி. நீங்க இன்னுமா இதெல்லாம் பெனாத்திட்டு இருக்கீங்க? திஸ் இஸ் ட்வென்டி பஸ்ட் செஞ்சுரி. இப்போ வந்து பேய் பூதம்னுட்டு. எனக்கு ரெண்டு காதும் சேத்து 16 ஓட்டை. fashion. இன்னும் குடுத்த இடம் இல்லை. ட்ரை பண்ணாதிங்க."

"பதிநேழாவதர்க்கு ஏற்ப்பாடு செய்கிறேன். வேறேதும் ஆசை? உனக்கு உன் தாத்தாவை பார்க்க வேண்டுமா?"

"கண்டிப்பாக. எங்கே இருக்கிறார்? தாத்தா... தத்தா.." என்று பலமாக சிரிக்க துவங்கினாள்.

"உனது தாத்தாவின் ஆசை உன் கல்யாணத்தை பார்க்க வேண்டும் என்பது. இனி அது நடக்காது. அவர் ஆசையை போக்க பயிற்ச்சிகள் தர வேண்டும். தியானம் செய்தால் தேறிவிடுவார்."

ரம்யாவிற்கு அடக்க முடியாமல் சிரிப்பு வந்தது. " Sorry.. this is too much!"

"சரி நீ நம்ப வேண்டாம். அதோ அந்தக்கதவை திறந்து உள்ளே போ. உனக்கே தெரியும்."

"கண்டிப்பாக. பார்த்துட்டா போச்சு." என்று கட கடவென்று கதவருகில் சென்று திறந்தாள்.

பளீர் வெள்ளை. கண்கள் கூசியது. உள்ளே ஒரு அடி எடுத்து வைத்தாள். அப்போதுதான் அவள் வயிற்றில் ஏதோ பயம் கவ்வியது.
'நல்லா பாத்தியா? போயிட்டாளா? செக் பண்ணுங்கடா' - என்று அவளை துரத்தியவன் கேட்டது ஞாபகம் வந்தது.
'ஒரு வேளை பாட்டி உண்மை சொல்கிறாளோ?'. பின்னால் திரும்பிப்பார்த்தாள்.

"வாப்பா ராஜேஷ். உனக்காகத்தான் காத்துகிட்டு இருக்கேன்." என்ற பாட்டியின் குரலோடு கதவு மூடிக்கொண்டது. அவள் உறைந்து நின்றாள்.

"ரம்யா!" - ஒரு வயதானவரின் குரல் கேட்டது."

என்ன பார்த்தா? அது யாரு? - அதை படிப்பவர்கள் முடிவு பண்ணட்டும்னு விட்டுட்டேன் சார். நல்லாத்தான சார் இந்த காதை இருக்கு? ஆனாலும் பிரசுரம் ஆகலை. பயங்கரமா வருத்தப்பட்டேன். எனக்கு ஒரு கதையாவது பிரசுரமாகனும்னு ஆசை சார். என்ன பண்றது? ஹும்ம்... ஆனாலும் நான் முயற்ச்சிக்காம இல்ல. இன்னொரு கதை எழுதி அனுப்பினேன். ஒரு பக்கம் வர்ற மாதிரி. அட்லீஸ்ட் அத போடுவாங்கன்னு. அது இதுதான்.

"
ராதா அந்த பெஞ்சில் உட்கார்ந்திருந்தாள். ராம் மிக மெல்ல அவளை அணுகினான்.

"ராதா நல்லா இருக்கியா?"

அவள் திடுக்கிட்டு,"யார் நீ?" என்றாள்.

"என்னைத் தெரியலை?"

ஒரே க்ஷணத்தில் ராதா கண்டுகொண்டாள். "ராம்!! ராம்..!! நீயா? என்னை பார்க்க வந்தியா? என்னை தனியா போகவிட்டுடியேடா!"

அணைத்துக்கொண்டாள்.

"என்னை மன்னிச்சுடு ராதா. அன்னைக்கு மரணம் கூட என்னை வேருத்துருச்சு..நான் அன்னைக்கு பிழைச்சுருக்கவே கூடாது. பிழைக்க வெச்சுட்டாங்க."

"36 வர்ஷம் காத்திருக்கேன்."

"நான் என் வாழ்க்கைல..ச்ச..", சிரித்து.."நான் இறந்த பிறகுகூட உன்னை சந்திப்பேன்னு எதிர்பாக்கல. ரொம்ப வினோதமா இருக்கு."

"இதென்ன தழும்பு.." என்று நேற்றியைக்காட்டி கேட்டாள்.

"மரணம் தந்த வடு"

"உனக்கு அழகா இருக்குடா." என்றாள்.

"நீ என்னை இன்னுமா ரசிக்கற? நீதான் அப்படியே இருக்க"

"நான் அழகா இருக்கும்போதே போயிட்டேனே..." என்று சிரித்தாள்.

"உன்னை இங்க பாத்ததும், இதுதான் சொர்க்கம்னு நினைச்சுட்டேன்."

"இன்னும் மாறலை நீ.." என்று வெட்கப்பட்டாள். வெள்ளையாக.

சற்று நேரம் காதல் மௌனம்.

"நான் உன்னோட வாழனும்ன்னு ஆசைலதான் இன்னும் இங்க இருக்கேன்."

"வாழரப்போதான் நமக்கு தைரியம் இல்லை..வா இப்போவே வாழலாம்."

"நீ இதை சொல்வன்னு எனக்கு நல்லா தெரியும். ஆனா ஆவிகளுக்கு ஆசை தீர்ந்துருசுன்னா, சொர்கத்துக்கோ நரகத்துக்கோ கேளம்பிகிட்டே இருப்பாங்களாம். எனக்கும் உனக்கும் சேந்து வாழத்தான் ஆசை. அப்படி பண்ணோம்னா, நம்ம ஆசைகள் நிறைவேறி, வேற வேற எடத்துக்கு போயிட்டோம்னா?"

"இப்படி ஒரு சிக்கலா?"

சற்று யோசித்துவிட்டு, "நாம ரெண்டுபேரும் சொர்கத்துக்குதான் போவோம். வா. கவலைப்படாதே!"

"நீ ஆவியா வந்து என்னை பாப்பான்னு எதிர்பாத்தியா? இல்லைல்ல? ஏதாவது எதிர்பாக்காம நடந்துருசுன்னா?"

"நீ ஏன் இன்னும் அதே மாதிரி பேசற?"

"பேசாம நாம ரெண்டு பேரும் ஒண்ணுமே பண்ண வேண்டாம். இங்கயே இருந்துடலாம். இப்படியே பேசிட்டு. ஒருத்தரை ஒருத்தர் பார்த்துட்டு. உன்னை இதுக்கு மேலையும் பிரிய மனசில்லை."

"இப்படி யோசியேன். ஒரு வேளை நாம ரெண்டு பேரும் சொர்கத்துக்கு போயிட்டா?"

"நீ ரியல் எஸ்டேட் பிசினஸ் பண்ணவன்..சத்யமா நரகம்தான்" என்று சிரித்தாள்.

அவனும் சிரித்துவிட்டு, "எனக்கு நம்பிக்கை இருக்கு. வா!"

"டேய்! புரிஞ்சுக்கோடா என்னால உன்னை மறுபடியும் பிரிய முடியாது.."

"சரி. நாம் எப்போதும் பண்ணுவதை பண்ணுவோமா?"

"என்னது?" என்றாள்.

இரண்டு விரல்கள் நீட்டி - "தொடு" என்றான்.

"பாத்தியா! நீ இப்படியெல்லாம் பேசி எவ்வளவு நாள் ஆச்சு? ஞாபகங்கள் மட்டும்தாண் இருந்துது. இப்போ நீயே வந்துட்ட. என்னை விட்டுடுடா ப்ளீஸ். நான் உன்னை பாத்துட்டே இருக்கேன். போதும்."

"ராதா! சொல்வதை கேள். எனக்கு உன்ன மறுபடி ஏமாற்ற மனதில்லை. தொடு. சொர்கமோ நரகமோ. இருவரும் சேர்ந்திருந்தால் போதும். நான் உன்னோட வாழ வேண்டும்,. தொடு.!"

"அன்னைக்கு வாழறப்போ சாகறதுக்கு தொட சொன்ன. தொட்டேன். இப்போ இறந்ததுக்கு அப்பறம் வாழறதுக்கு தொட சொல்ற. ஆனா ஒண்ணுடா. இப்படி ஒரு crazy conversation நமக்குள்ள நடந்ததே இல்ல. இல்ல? சொர்க்கம் நரகம்ன்னு. எவ்வளவோ சண்டை! ஆனா இது ஒரு மாதிரி புதுசா இல்ல?" சிரித்தாள்.

"தொடு ராதா!"

"வேண்டாமே டா..பயம்ம்மா இருக்கு.."

"தொடு!!!"

தொட்டாள்

"

அவ்வளவுதான் சார். இதுலயும் முடிவு உங்க கைலதான். இந்த கதைக்கு பாராட்டெல்லாம் கெடைச்சுது. ஆனா பிரசுரம் ஆகலை. ஒரு பக்கத்துல இது அடங்காதாம். அட வெங்காயம் ரெண்டு பக்கத்துல பிரிண்ட் பண்ணு! செம்மையா கடுப்பாகிட்டேன் சார்.

நேர பத்திரிகை ஆசிரியரை போய் பாத்தேன். "இதெல்லாம் பழைய சரக்கு சார். புதுசா யோசிச்சு எழுதுங்க" என்றாரே பார்க்கணும். என்ன பண்ண முடியும் சொல்லுங்க? மறுபடி ஒரு காதை எழுதி அனுப்பிருக்கேன்.

ரொம்ப சாதாரண காதை. பார்ப்போம்.

சார் நீங்களே சொல்லுங்க. நான் ரொம்ப நல்லா மனுஷன் சார். இந்த ஒரு ஆசை நிறைவேறாம இப்போ ஆவியா அலையறேன். இந்த கதை பிரசுரமாகனும் சார். வேண்டிக்கோங்க. நான் பாட்டுக்கு என் வேலைய பாக்க போய்டுவேன். இந்த "ஆவிகள்" பத்திரிகை ஓட ஆசிரியர் ரொம்ப நல்லவர்ன்னு கேள்வி. பார்க்கலாம்."

இந்த கதை பிரசுரமாகனும் சார். வேண்டிக்கோங்க. நான் பாட்டுக்கு என் வேலைய பாக்க போய்டுவேன். இந்த "ஆ.வி." பத்திரிகை ஓட ஆசிரியர் ரொம்ப நல்லவர்ன்னு கேள்வி. பார்க்கலாம்.

பாஸ்ட் புட் காதல்

இரவைக்கலைக்கும் முதல் ஒளி..

இலையுதிர் காலத்து முதல் சருகு ..

நீல வானத்தின் மூலை மேகம்..

மலரின் கடைசித் தேன் துளி ..

இவையெல்லாம் உனக்கான என் தேடல்கள்...

ஆனால்,



நீ என்னிடம் கேட்பதெல்லாம்

'பெப்சி'யும் 'பீட்சா'வும் தான்..

Thursday, December 29, 2011

பெத்த(?) மனம்..


"நல்லபடியா எழுதும்மா" என்று குழாயில் நீர் இறைப்பதை நிறுத்திவிட்டு புன்னகையோடு வாழ்த்தினாள் சரஸ்வதி (எ) சரசு. "இன்னைக்கு பரீட்சை முடியுதாம்மா?"

"இல்லம்மா, இன்னும் ஒரு வாரம் ஓட்டனும் எப்டியாது, வரேன் மா" என்று அவரசமாக ஓடினாள் ஷக்தி. சாவித்ரியின் எதிர்'பிளாட்டு'ப்பெண் பிரகாசமான கண்கள், கச்சித உடல், பின்னாதகூந்தல்(சென்னை வெய்யிலில் எப்படி சமாளிக்கிறாள்? கேட்கவேண்டும் ), லட்சணம், சன்னமான கர்வம். ஷக்தி. விரைவில் ஷக்தி எம்.பி.பி.எஸ்.

பேருந்தை பிடிக்க விரைந்தவளை கொஞ்சம் தூரம் வரை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தாள் சரசு. ஏதோ நினைத்தபடி சிரித்துக்கொண்டாள். ஒரு குடத்தை இடையில் செருகி மற்றொன்றை கையில் தூக்கிக்கொண்டு வீட்டை அடைந்தத போது நடராஜன் தன் சீருடையில் இருந்தான். அவளது கணவன்.

"என்னாங்க, சாப்டிங்களா அதுக்குள்ள? சீக்கரம் போகனுமா இன்னைக்கு?"

"ஆமா.."

"இன்னிக்கு உங்களுக்கு புடிச்ச தொவையல் வச்சுருந்தேன் சாப்டிங்களா?"

"நான் பொடி வெச்சு சாப்பிட்டேன்...", என்று அங்கும் இங்கும் எதையோ தேடிக்கொண்டிருந்தான்.

"என்னாங்க, இங்க தான இருக்கு.. " என்று தான் அரைத்த எள்ளு தொகயலை அவன் முன் நீட்டினாள்.

"இப்போ இது ரொம்ப முக்கியமா? சூப்பர் வைசர் வராருடி.. நகரு", என்று சீப்பை கண்டுபிடித்த கோலம்பசாக விரைந்தான்.

முகம் ஒரு கூற்வினாடி சுண்டி, மீண்டு, நிதானித்து.. "இன்னைக்கு நம்ம சக்திக்கு பரிட்சயாங்க. அவல பாத்திங்கன்னா நல்லா எழுதினியா என்ன ஏதுன்னு ரெண்டு வார்த்த கேளுங்க..பொண்ணு சந்தோஷ படும்.." என்றாள்

"அதெல்லாம் நீயே கேக்க கூடாதா?", தலை சீவிக்கொண்டு, பர்ஸ் எடுத்துக்கொண்டு, செருப்பு மாட்டிக்கொண்டிருந்தான்.

"நான்தான் தெனம் கேக்கறேனே..நீங்க ஒரு வார்த்த கேக்கறதுல என்ன கொற வந்துச்சு?"

"ஆங்.. சரி சரி..." , அவள் குடுத்த உணவுக்கூடையை வாங்கிக்கொண்டான் அனிச்சையாக.

"பத்தரமா போயிட்டு வாங்க... "

கால்கள் படி இறங்கும் சப்தம்தான் அவனது - "வீட்ட பாத்துக்கோ.. வெளில போனா பூட்டிட்டு போ..வரேன்."

****

அவன் போன வழியை கொஞ்சம் நேரம் பார்த்துக்கொண்டிருந்தாள். பின், வீட்டை சுத்தம் செய்து, குளித்து, சமைத்து, சிறிது நேரம் வெறுமென அமர்ந்து, கடனிற்கு சாப்பிட்டு, கொஞ்சம் உறங்கி எழுந்து, மறுபடி முகம் கழுவி, பவுடர் இட்டுக்கொண்டு எதிர்த்த வீட்டு சரோஜா மற்றும் மேலும் சில வீட்டம்மாக்களோடு கோவிலுக்கு கிளம்பினாள்.

நாள் முழுதும் ரேடியோ கேட்பாள். டி.வி. இல்லை. பழைய பாடல்கள் என்றால் உயிர். ராகம், தாளம், பாடியவர், இசைஅமைத்தவர், படம் என்று அதைப்பற்றி எதுவும் தெரியாது.

"நல்லா இருக்குல்ல?" , அதனால் கேட்பாள்.

கோவிலுக்கு போவது, தன் புருஷனுக்கு பிடித்ததை சமைத்துப்போடுவது, தன் குடியிருப்பில் விளையாடும் குழந்தைகள், முக்கியமாக எதிர்த்த வீட்டு ஷக்தி, பூரணி ... சந்தோஷமாக இருந்தாள்.

****

இரவு நடராஜன் வீடு திரும்புகையில் அவனுக்கு சுட சுட காபி இருந்தது. அவன் குடித்து இளைப்பாறி, குளித்து வந்தான்.

"இன்னைக்கு எப்டிங்க போச்சு? ஐயா ஏதும் சொன்னாங்களா?"

"இல்லடி...இன்னைக்கு ஒன்னும் சொல்லல.. எதோ நல்லா மூட்ல இருந்தார் போல."

"ம்ம்ம்.."

குழித்து முடித்து சாப்பிட்டுக்கொண்டிருக்கையில்,

"கேளம்பரபோ சக்தி பத்தி ஏதோ சொன்னியே.. என்னது?"

"ம்க்க்ம்.. இப்போதான் வீடு நினைப்புக்கு வருதாக்கும்? உங்களுக்கும் அந்த புள்ள மேல பாசம் இல்லாமலா இருக்கு?"

"நா என்னடி பண்ணுவேன்.. அவசரத்துல இருந்தேன் காலைல.. ரொம்ப கத்திட்டேனா என்ன?"

"நீங்க கத்தாததா? இன்னைக்கு ஒன்னும் இல்ல.. பட படன்னு இருந்திங்க அவ்வளவு தான்.."

"என்ன சமைசுருக்க?"

"காலைல வெச்ச தொகையல் தான்.."

"எள்ளு தான?" என்று பரபரப்பாக சாப்பிடத்தயாரானான்.

"இப்போ மட்டும் ஜொள்ளு விட்ரிங்களே!" என்று சிரித்தாள்.


*****
இரண்டு மாதங்கள்...
*****
"என்னங்க..இன்னைக்கு நம்ம சக்தி இருக்காளே, அவள பாத்தேங்க.. பொண்ணு முகத்துல என்னைக்கும் இல்லாத சிரிப்பு. என்னவா இருக்கும்?"

"ஏண்டி, அவள்டயே கேட்டிருக்கலாமே. தூங்கரப்போ ஏன் இம்ஸ பண்ற?"

"கேட்டேங்க.. ஆனா ஒண்ணுமே சொல்லல பொண்ணு. வெறுமென ஒன்னும் இல்லம்மான்னு சொல்லிடுச்சு. நாளைக்கு கேக்கணும்.."

"பேசாம படும்மா..நாளைக்கு சீக்கரம் எழுந்துக்கணும். ஊருக்கு போறோம்ல?

"என்னமோ ஒன்னு இருக்குங்க. பொண்ணு சொல்ல மாட்டேங்குது.."

****

ஊரில் திருவிழா. சொந்தங்களின் ஊடேயும் சரசுவிர்ற்கு ஷக்தியின் நினைவு அவ்வப்போது வந்தது. 'எப்பயுமே சிரிச்ச முகம்தான்.. இருந்தாலும் அன்னைக்கு வேற எதோ ஒண்ணு... ம்ம்ம்.. நம்மகிட்ட சொல்லாம விட்டுடுச்சே.. போன ஒடனே இன்னொருக்க கேட்டா சொல்லிடும்.'

*****
ஒரு வாரம்.

*****

"வேலையெல்லாம் போட்டது போட்ட படி இருக்கு... இந்த மணி ஒழுங்கா பாத்துக்கிட்டானான்னு தெரியல.. கொஞ்சம் லேட் ஆகும் வரதுக்கு.. தேடாத. அப்டி வர ரொம்ப நேரம் ஆச்சுன்னா நானே போன் பண்றேன்."

"சரிங்க. நிதானமா வாங்க. நான் மொத சக்திட்ட பேசணும்.. பொண்ணு எதோ சேரி இல்ல.."

"இதோ பாரு சரசு.. நீ எல்லார் மேலயும் உரிமை எடுத்துக்காத. பலருக்கு புடிக்காது."

"என்ன இருந்தாலும் நம்ம பொண்ணுங்க சக்தி.."

"நம்ம பொண்ணு இல்ல.. அது செல்வராஜோட பொண்ணு. அந்த ஆளு சும்மாவே சிடு சிடுன்னு இருப்பன். வீனா வம்பு பண்ணாத."

"ம்ம்ம் சரிங்க.. நான் கேக்கல அப்போ.."

****

அன்று மாலை ரயில்வே காலனியில் இருந்த பெருமாள் கடைக்கு சென்றிருந்த போது, சக்திக்கு ஒரு போன் கால் வந்திருந்தது. இவளுக்கு இருப்பு கொள்ளவில்லை. சரி, கேட்டு விடுவது என்று காத்துக்கொண்டிருந்தாள்.

போனை வாங்கிய ஷக்தி ஒன்றுமே பேசவில்லை. கண்களில் நீர் ததும்பியது. 'படக்'கென்று துண்டித்துவிட்டு வீட்டை நோக்கி ஓடத்தொடங்கினாள்.

இதை அனைத்தையும் கடையின் மர பெஞ்ச்சில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்த சரசு, "யம்மா சக்தி.. கொஞ்சம் நில்லும்மா.."

ஷக்தி நின்றாள். திரும்பவில்லை. அவசர அவசரமாக கண்களை துடைத்துக்கொண்டாள். சரசு அருகே சென்றவுடன், "சொல்லுங்கம்மா" என்றாள். கண்களில் ஒட்டிக்கொண்டு இன்னும் கண்ணீர். முகத்தில் சோகம்.

"என்ன கண்ணு? என்ன ஆச்சு? என் கிட்ட சொல்லலாம்ல?", என்று கண்களைப்பார்த்து கேட்க்கையில் ஷக்தி, துவண்டு சரஸ்வதியின் மார்பில் விழுந்து அழத்துவங்கினாள். கார்த்திக் என்று ஒரு பையனை தனக்கு பிடித்திருப்பதாகவும் அவனது பெற்றோர் தன் வீட்டிற்கு வந்தபோது அவனது அப்பாவிற்கும் இவள் அப்பாவிற்கும் நடந்த பிரச்சனைகளை கூறினாள். அதனால் அவர்கள் பிரியப்போகிறார்கள் என்றும் விம்மிக்கொண்டே கூறி முடித்தாள்.

"அட கிருக்குப்புள்ள!! இதுக்குதான் அழுவியா நீயி? உலகத்துல எத்தனையோ பேருக்கு எவ்வளவோ பிரச்சனைங்க வருது.. அதெல்லாம் சமாளிக்க வேண்டாமா? அந்த பையன் நல்ல பையனா?"

"ம்ம்ம்.. "

"அழக்கூடாது.. கண்ண தொடைச்சுக்கோ. இதோ பாரு.. அவன் உன்ன தேடி வருவான். அப்போ அவன விட்டுடாத.. அப்டி பயந்து வராத பையன் தேவை இல்ல.. நீ இப்டி வருத்தபட்ரன்னு தெரியமா அவனுக்கு?"

"ம்ம்.. அவன் தான் போன் பண்ணான்.. ஒரு வார்த்த கூட பேசல.. வள வளன்னு பெசுவான்ம்மா." என்று சொல்லும்போதே மறுபடி அழுதாள்.

இருவரும் அருகில் இருந்த பெஞ்ச்சில் அமர்ந்தார்கள்.

"இதோ பாரு கண்ணு.. நீ அவன மனப்பூர்வமா காதலிக்கரப்போ எவனும் உங்கள பிரிக்க முடியாது. கண்ண தொடைச்சுக்கோ.. அவன்ட பேசு. எல்லாம் செரியா போயிடும். உன் அப்பா கெடக்காரு. எப்போ பாரு வீராப்பா. பொண்ணுக்கு புடிச்சுருக்குன்னு விட்டுக்குடுப்பாரா அத விட்டுட்டு.. நீ அழாத புள்ள..ம்ம்ம்.. இப்போதான் புரியுது என்னடா பொண்ணு கொஞ்சம், கூட சிரிக்குதே இப்போல்லாம்ன்னு நானும் யோசிச்சுட்டே இருந்தேன்.. வா கண்ணு.. படுத்துக்கோ..வா...", என்று தனது மடியில் படுக்க வைத்துக்கொண்டாள் சரசு.

மடியிலேயே அரை மணி நேரம் உறங்கிப் போனாள் ஷக்தி. எழுந்து, "ரொம்ப தேங்க்ஸ்ம்மா." என்று சன்னமாக சோகப்புன்னகை ஒன்றை உதிர்த்து விட்டு ஓடினாள்..

தன் கணவனிடம் இந்த விஷயத்தை சொல்லக்கூடாது என்று தீர்மானித்தாள். 'கோவிச்சுக்குவாரு'..

****
அடுத்த வாரம் ஷக்தி எதோ மெடிக்கல் கேம்ப் என்று கேரளா சென்றாள்.

அதற்கடுத்தவாரம் ஷக்தி வீடு திரும்பி முதல் காரியமாக சரசுவைப்பார்த்து,

"அம்மா.. நீங்க சொன்ன மாதிரி அவன் வந்தான். கேரளாவுக்கே..."

"சொன்னேன் பாத்தியா?? என்ன சொன்னார் மைனரு?"

"என்ன சொல்வான்..ரொம்ப மிஸ் பண்ணானாம். பாக்கணும் போல இருந்துதாம்..வந்துட்டான்." என்று பூரித்தாள்.

"இன்னும் உன்னை புடிச்சுருக்கு தான?"

"என்னம்மா இப்டி கேட்டுடிங்க.. கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டேன்.. சரின்னு சொல்லிட்டான் டக்குன்னு.." என்று சிரித்தாள்.

"நல்ல பசங்க போங்க.. இப்டி சிரிப்ப பாத்து எம்புட்டு நாள் ஆச்சு புள்ள.. உம்ம்ம்ன்னு உக்காராத. உனக்கு அது நல்லாவே இல்ல."

"நீங்க இருக்கிங்களேம்மா" என்று இறுகக் கட்டிக்கொண்டாள்.

"அது சரி.." என்று ஷக்தியின் அணைப்பில் கொஞ்சம் வெட்க்கித்தான் போனாள்.

****
மறுதினம் சரசு, திருப்பதி கடையில் எதோ வாங்கச்சென்றவளின் எதிரில் ஷக்தி அனைவருக்கும் "குட் நைட்" சொல்லிக்கொண்டே வந்தாள். விளையாடிக்கொண்டிருந்த மணல் வீடு இன்ஜினியர், வாக்கிங் ஸ்டிக் தாத்தா, குல்ஃபீ சிறுவன் என்று அவள் வருகையில் சந்தித்த அனைவருக்கும். சரசுவைப்பார்த்ததும் "வெரி குட் நைட்ம்மா" என்று கூறிவிட்டு துள்ளிக்குதித்து ஓடினாள்.

'இம்புட்டு சந்தோஷமா பிள்ளைய பாக்கறத விட்டுட்டு ஏன்தான் இந்த அப்பன்காரங்க நச்சு பண்றாங்களோ' என்று தனக்குள்ளேயே எண்ணிக்கொண்டு, "அண்ணாச்சி, ரெண்டு முருங்கக்கா குடுங்க" என்று வாங்கிசென்றாள்.

****
ஒரு மாதம்..
****
அன்று நடராஜன் வீடு திரும்பிய போது அவனுக்கு காபி தயாராக இல்லை.

"என்னடி ஆச்சு?"

"இன்னைக்கு நிறைய நடந்துடுசுங்க."

" என்ன நடந்துச்சு?"

"அப்புறம்...உங்ககிட்ட.. உங்ககிட்ட.. ஒரு விஷயம் மறைச்சுட்டேன்."

"நீயா?", ஹாஸ்யம். "சொன்னத மறந்துருப்ப.. உன்னால மறைக்க கூட முடியுமா என்ன? எதோ விஷயம் நடந்துதுன்ன .. மறைச்சுட்டேன்னு சொல்ற..என்னதான் நடந்துது?" என்றான்.

"இல்லைங்க.. உங்களுக்கு புடிக்கலன்னு தெரிஞ்சும் நான் சக்தி கிட்ட கேட்டேன். என்ன ஏதுன்னு... பொண்ணு யாரோ ஒரு பையன வீட்டுக்கு தெரியாம கல்யாணம் கட்டிக்குச்சுங்க!"

"என்னடி சொல்ற?"

"ஆமாங்க..அன்னைக்கு நீங்க வேண்டாம்ன்னு சொன்னாலும் அந்த புள்ளைட்ட கேட்டேன்.. என்னம்மா எதோ சரி இலையே நீன்னு.. அப்போதான் எல்லாம் சொல்லிச்சு.. இன்னைக்கு நம்ம பூணிக்கு பையன் பாக்கறோம் வாம்மான்னு கூப்ட்டாங்க எதிர்த்த வீட்டு சரோஜாக்கா.. பையன் நல்லா வெள்ள தோலும் அதுவுமா நல்லாத்தான் இருந்தான். எல்லாம் கூடி வர்ற நேரத்துல, அந்த ரகுப்பயலோட அப்பா..."

"யாருடி ரகு?"

"அதாங்க..பூரணிய பாக்க வந்தானே.. அவன். அவனோட அப்பா, வாய வெச்சுகிட்டு சும்மா இல்லாம, என் ரெண்டாவது மகனும் டாக்டர் படிக்கிறான்.. உங்க பொண்ண குடுக்க சம்மதமான்னு கேக்க, போட்டாளே பாருங்க. இவ காதலிக்கிற பண்ற பையனோட வீட்டுக்கு தெரியாம கல்யாணம் பண்ணிருக்கா!"

"அடக்கொடுமையே!"

"எனக்கு என்ன சொல்றது என்ன பண்றதுன்னே தெரியல.. அவ அப்பா அவள அடி அடின்னு அடிக்கிறாரு. பாக்க வந்தத பையனோட அப்பாவும் வேண்டாம்ன்னு போயிட்டாரு... பூரணிய பாக்கவும் பாவமா இருக்கு.. அவளுக்கு தெரியும் போல."

"அக்காகாரிக்கு எங்க போச்சு புத்தி?"

"நீங்க சும்மா இருங்க! சக்தி அழகுபெத்த பொண்ணு.. அவ தப்பு முடிவே எடுக்க மாட்டா. இவ அப்பா இப்படி இருக்கறப்போ இவ என்ன பண்ணுவா?"

"என்னவோ போ.. நீ சக்திய விட்டுக்குடுக்க மாட்ட.. இப்போ எங்க இருக்கா? நீ ஒன்னும் தலையிடலையே!?"

"நான் ஒண்ணுமே பேசலைங்க.. அவங்க சண்டை போட ஆரம்பிச்சொன்னே நான் வந்துட்டேன். என்னால பாக்க முடியல..எனக்கும் முன்னமே தெரியுமா, அதுனால எனக்கு குத்த உணர்ச்சியா இருந்துது.."

"உன்ன யாருடி அவங்க வீட்டு சமாச்சாரத்துல மூக்க நோளைக்க சொன்னது? நீ பேசாம போயிருக்கலாம்ல? உன்ன எவன் போய் போய் கேக்க சொன்னது?! வர வர என் பேச்சுக்கு மரியாதையே இல்ல.. இப்போ அவ அப்பா என்கிட்டே வந்து கேட்டா நான் என்ன சொல்றது? 'ஆமா சார் தெரியும்,உங்க மேல தான் தப்பு'ன்னா?? உன்னோட பெரிய ரோதனடி"

"நம்ம பொண்ணு இப்டி எதுனா பண்ணினா பேசாம இருந்துருவின்களா?!" என்றாள் சற்றே பொறுமை இழந்து. அவளுக்கு ஷக்தி செய்த செயல், அவள் அப்பா அதற்க்கு அடித்தது,பூரணியுடைய சம்பந்தம் நின்று போனது - எல்லாம் சேர்ந்தது கொஞ்சம் படபடப்பாகத்தான் இருந்தாள்.

நடராஜனுக்கு விருட்டென்று கோபம் வந்த்தது... ஒன்றும் பேசாமல் எழுந்து சென்றான். இரவு வெகு நேரம் கழித்தே திரும்பினான்.

****
அடுத்த நாள் இன்னும் ரகளை ஓயாமல் இருந்தது. சக்தியின் அப்பா அவளை வீட்டிர்ற்குள் அனுமதிக்கவில்லை. முந்தின இரவு நடராஜன் வரும் வரைக்கும் அவர்கள் அவளை கசக்கிக்கொண்டிருந்தார்கள். யாரும் தூங்கவில்லை.

அதிகாலை சரசு வீட்டு வாசலில் வந்து நின்றுகொண்டாள். ஷக்தி அழுதுகொண்டிருந்தாள். அவள் அப்பா திட்டிக்கொண்டும், அவள் அம்மா திட்டி/அழுதுகொண்டும் இருந்தார்கள். சரசு அவர்கள் வீட்டின் வாசலையே பார்த்துக்கொண்டிருந்தாள்..

ஷக்தி வீட்டை விட்டு கிளம்புவதற்கு ஆயத்தமாகிறாள் போலும். பெட்டியில் தனது துணிகளை அடுக்கி வைத்துக்கொண்டிருந்த சத்தம் கேட்டது. அவ்வப்போது விசும்பிக்கொண்டே தன் அப்பாவிடம் வாக்குவாதம்.




தூரத்தில் கெட்ட சண்டை சத்தம், அவசர அவரசமாக கதவின் பக்கம் வந்து திறந்தது ...

கண்கள் வீங்கி முகம் சிவந்து ஷக்தி வெளியில் வந்தாள். கதவை உடனே மூடினார் செல்வராஜ். எதிரே நின்றிருந்த சரசுவைப்பார்த்தவுடன், கட்டிக்கொண்டாள்.

"அழாதம்மா..அழாத.. எல்லாம் சரியா போய்டும்..காலம்தான் எல்லாத்துக்கும் பதில் சொல்லும்.." என்று அவள் கூறிக்கொண்டிருக்கும்போதே, "ஷக்தி! எங்க இருக்க?!" என்று கீழே இருந்து குரல் கேட்டது. இருவரும் எட்டிப்பார்த்தார்கள். கீழே அவள் அப்பா தூக்கி எறிந்த பெட்டியையும் துணியையும் சரிபடுத்திக்கொண்டிருந்தான் ஒரு இளைஞன்.

"இவருதான் அவரா?" என்றால் சரசு.

மெளனமாக தலை அசைத்தாள் ஷக்தி.

"பையன் நல்லா ஜம்முன்னு இருக்கான்..." என்று சரசு சொன்னதும், கலவரத்தினூடே ஓரமாக புன்னகை எட்டிப்பார்த்து உடனே அடங்கியது.

"வரேன்ம்மா.."

"இரு..", என்று உள்ளே சென்று ஐந்நூறு ரூபாய் எடுத்துவந்து, "நல்லா இரும்மா.. என்னவா இருந்தாலும் நாங்க இருக்கோம். சரியா?"

தலை அசைத்தாள்.. இருவரும் கீழே இறங்கினார்கள். கார்த்திக் ஒரு ஆட்டோவில் வந்திருந்தான். சிகப்புச்சட்டை, கருப்புக்கண்ணாடி, தெத்துப்பல், சிவப்பு. இருவரும் அவர்கள் வாழ்க்கையை தொடங்க மீட்டருக்கு மேலே பத்து ரூபாய் குடுத்து கிளம்பினார்கள்.

*******
அன்றிலிருந்து சரசு, தினமும் ஷக்தியைப்பார்க்காமல் எதோ ஒன்றை இழந்தது போல் உணர்ந்தாள்.

"என்னங்க சக்திய பத்தி எதுனா தெரிசுக்கணும் போல இருக்கு. அந்த பொண்ணு எண்ண பண்றா? எங்க இருக்கா? ஒன்னுமே தெரியலை..."

"விடேன்டி.. அவளை பெத்தவங்களே தண்ணி தெளிச்சு விட்டாங்க.. எல்லாம் சரியா போய்டும்.." என்று நடராஜன் சொல்வதை அவள் பொருட்படுத்தவில்லை.

"...அந்த பையன் அவளை நல்லா வசுருக்கானான்னு தெரியலையேங்க.. படிப்புக்கு காசு வேணுமா? அந்த பையன் வீட்ல எண்ண சொன்னங்க? சேத்துக்கிட்டாங்களா? அவன் என்ன வேலை பாக்கறான்? அவங்க எங்க இருக்காங்க? ஒன்னுமே தெரியலையே! எப்டித்தான் பெத்த மனசு கல்லா கெடக்கோ?! நமக்கே இப்டி இருக்கே!"

"இதோ பாரு.. உனக்கு தெரியவரும். சக்தியே வருவா. கொஞ்சம் பொறுமையா இரு. உனக்கே இவ்வளவு பதபதைப்பு இருக்கறப்போ அவங்களுக்கு இருக்காதா? வெளியில காமிச்சுக்க மாட்டங்க அவ்வளவுதான்.."

"என்னமோ போங்க. நாம அந்த பையனோட அப்பாவ போய் பாத்து பேசுவோமா?"

"என்ன ஒளர்ற?"

"உங்களுக்கு நான் என்னைக்கு தெளிவா பேசின மாதிரி தெரிஞ்சுருக்கு.."

"இவ்வளவு பதட்டப்படாத. கொஞ்சம் நிதானமா யோசி. இப்போ நான் வேலைக்கு போயிட்டு வரேன். வீட்ல தனியா இருக்காத. வேணும்னா மதியம் சினிமா போயிட்டு வா. இதப்பத்தியே யோசிச்சுட்டு இருக்காத."

"ம்ம்ம்.... என்ன சமைச்சு வைக்கட்டும்?"

சிரித்துக்கொண்டே... "போயிட்டு வரேன்..."

"ம்ம்ம்..."

===================
மூன்று மாதங்கள்...
===================

ஷக்தியின் அப்பா மஞ்சள் காமாலையால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார். ஷக்தியின் அம்மாவும் அக்காவும் வீடும் மருத்துவமனையுமாக அல்லாடிக்கொண்டிருந்தார்கள். சரசு முடிந்த அளவு உதவினாள். மருத்துவமனைக்கு சாப்பாடு கட்டிக்கொடுத்தாள். யாரும் இல்லாத நேரம் வீட்டைப்பார்த்துக்கொண்டாள். பூரணி அலுவலகம் செல்லும்போது டிபன் செய்து தந்தாள். அவ்வப்போது ஷக்தியைப்பற்றிக்கேட்டாள். இருவருக்கும் தெரியவில்லை.

ஒரு நாள் வீட்டை சுத்தம் செய்துகொண்டிருக்கையில், ஷக்தியின் அம்மா, சுவற்றில் மாட்டியிருந்த ஷக்தி,செல்வராஜின் புகைப்படத்தை பார்த்தவுடன் அடக்கி வைத்திருந்த சோகம் வெடித்து அழத்துவங்கினாள்.

"என்னம்மா நீங்க மனசு ஒடைஞ்சா எப்படி?"

"நீங்களே சொல்லுங்க.. ஆசை ஆசையா பொண்ண டாக்டருக்கு படிக்க வச்சாரு. இப்போ இவரு இப்டி படுத்துக்கேடக்கரப்போ அவ எங்கங்க போனா? அவள பத்தி பேசாத நாளே இல்லைங்க..."

"அழாதிங்கம்மா.. நீங்க இப்போ அழக்கூடாது. கொஞ்சம் தைரியமா இருங்க.."

"என்னனவோ சொல்றாங்கங்க.. ஸ்கான்.. டெஸ்ட்.. எல்லாம். அவரு நாளுக்கு நாள் தளண்டுட்டே வராருங்க.. நமக்கு என்ன தெரியும்.. டாக்டருக்கா படிச்சுருக்கோம்?"

"சக்திக்கு தெரியுமாம்மா? தெரிஞ்சா பாக்க வராம இருக்காது."

"அவளுக்கு தெரியாதுங்க.. அவள பாத்தா இவரு சரியா போய்டுவாரு. அவரு மனசு பூரா அவள பாக்கனும்னு தான் இருக்கு."

"என்னங்க நீங்க.. இம்புட்டு பிரியம் வச்சுட்டு அவள தொரத்திட்டிங்க.. தப்புத்தான். அதுக்குன்னு இவ்வளவு பெரிய தண்டனையா? அவள ஒரு எட்டு பாத்து விஷயத்த சொல்லிட்டு வந்துடலாம்ல?"

"அவ வர மாட்டாங்க.."

"உங்க பொண்ண பத்தி உங்களுக்கே நான் சொல்லனுமா? அப்பாவுக்கு ஒண்ணுன்னா தலைகீழ நிப்பாங்க. நீங்க ஒருக்க சொல்லிப்பாருங்க. வருவா..நான் யாருங்க. எதிர்த்த வீட்டுக்காரி. என் மேலயே அவ எவ்வளவு பாசமா இருக்கா? அப்பாவ பாக்க கண்டிப்பா வருவாங்க."

அடுத்த நாள் ஷக்தியை, பூரணியும் சரோஜாவும் மெட்ரோவில் பார்த்து பேசி இருக்கிறார்கள். அவள் வருவதாகக் கூறினார்கள். சரசுவும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தாள்.

ஷக்தி வரவில்லை.

அடுத்த நாள் அவள் அப்பா இறந்துபோனார்.

============
அடுத்த நாள்
============

"சக்திக்கு என்ன நெஞ்சழுத்தம் பாத்திங்களா? என்னங்க இப்படி மாறிடுச்சு பொண்ணு?"

"அவசரப்பட்டு ஒரு முடிவுக்கும் வராத. அவளுக்கு என்ன வேலையோ. நாளைக்கு வரலாம்னு நேனைச்சுருப்பா.

"என்னவா இருக்கட்டும்...பெத்த அப்பாவுக்கு உடம்பு சரி இல்லன்னா வர மாட்டாளா மகராசி? அப்படி என்ன வீம்பு? அப்படி என்ன அந்த புருஷன்காரன் மயக்கி வச்சுருக்கான்? நேத்தி வந்தாளே. நல்லா வேலை எழவுக்காவது வந்தா. அந்த அம்மா ஒத்தைல என்ன பாடு படுது. இவ அக்கா ஒண்டியா இப்போ அம்மாவ பாத்துக்கணும். அவ அம்மா கோவத்துல அப்படித்தான் பேசுவாங்க.. இவ இல்ல பொறுத்துக்கணும்? அவசர அவசரமா வளந்தா போதுமா. பெத்தவங்களுக்கு வயசாகுதுன்னு தெரிய வேண்டாமா? இப்படி மதிக்காம இருந்தா எப்படி நல்லா இருப்பா? அவ்வளவு என்ன அகங்காரம்?"

நடராஜன் ஒன்றும் பேசவில்லை.

"என்னங்க ஒன்னும் சொல்ல மட்டேங்கரிங்க?"

"என்ன சொல்லனும்னு எதிர்பாக்கற?"

"நான் சொல்றதுல எதுவும் தப்பு இருக்காங்க? அவ அம்மா போன்னு சொன்னா போயிடுவாளா? அப்பாவைத்தான் பாக்க வரல. அம்மாவை தேத்தாலாம்ல?"

"சரசு... நீ சொல்றதெல்லாம் சரிதான். அதுக்கு நாம என்ன பண்ண முடியும்?"

"நாம ஒன்னும் பண்ண முடியாதுங்க. நம்ம சக்தி ஏன் இப்படி மாறிட்டா?"

"பாரு... நீ ஏன் அவசர அவசரமா வார்த்தைய விடற? அவள் நல்லா பொண்ணுதான்.. அவளோட ஞாயம் நமக்கு புரியாது. அவள்ட்ட பேசாமலே எப்படி நீ முடிவுக்கு வரலாம் மாறிட்டான்னு?"

"மாறிட்டாங்க.. எனக்கு என்ன வந்துது...அவ என்ன நம்ம பொண்ணா?", என்று விசும்பினாள்.

நடராஜன், செய்வதறியாமல், வேகுநாட்களுக்குப்பிறகு சரஸ்வதியை அணைத்துக்கொண்டார். "ஏன் அழற நீ? நம்ம பொண்ணாத்தான் அவள பாக்கறோம். அவளும் பிரியமாத்தான் இருக்கா.. புரியுதா? அவளோட வாழ்க்கைலயே நிறையா பிரச்சனைகள் இருக்கு. அதெல்லாம் முடிஞ்ச உடனே, உன்கிட்ட தான் வருவா. அவ நமக்கு பிறக்கலைன்னாலும் அவ நம்ம பொண்ணுதான்.."

"தெரியலைங்க.. அவ, அம்மா அப்பாவையே மறந்துட்டாளே. நம்மல்லாம் எந்த மூலைக்கு?"

கண்களைத்துடைத்தவாறு சமைலறைக்குள் சென்றாள். பெண்களுக்கு சமையலறையில் நிம்மதி,சந்தோஷம்,துணை என்று எல்லாமே கிடப்பது எப்படி என்று தெரியவில்லை.

நடராஜன் சொல்வதரியாமல் நின்றார். 'இவளுக்கு எப்படி புரிய வைப்பது? சக்தி நம் குழந்தை இல்லை. நம் ஜெயா நம்மிடம் வர மாட்டாள். அவளே நம்மிடம் இருந்தாலும் நாம் அவளிடம் ஒரு வயதிற்கு மேல் உரிமை எடுத்துக்கொள்ள கூடாது. சக்தி என்னதான் பிரியமான பெண்ணாக இருந்தாலும் அவள் மீது நீ அளவு கடந்து அன்பைப்போழிகிறாய் . சரசு.. அனைவரையும் அவ்வளவு எளிதாக நம்பாதே. நம்பிக்கை ஏமாற்றம் தரும். உனக்கு நான். எனக்கு நீ. நமக்கு ஜெயா. இப்போது இல்லையென்றாலும் ஜெயா. உனக்கு ஏன் புரியவில்லை? துவண்டுவிடுவாய். வேண்டாம். விடு! சக்திக்கு இப்போது அவள் கணவன் இருக்கிறான். அவனோடு தான் இருக்கப்போகிறாள். அவள் நினைவில் நீ இருக்கிறாயா இல்லையா என்று கூட தெரியாது. அவளைப்பொறுத்த வரை நீ எதிர்த்த வீட்டில் இருக்கும் ஒரு நல்ல பெண்மணி. அம்மா அல்ல. புரிகிறதா? ஆற்றில் போட்டாலும்...' என்று .சொல்லத்தெம்பில்லை; நினைத்துக்கொண்டிருக்கும் போதே சரசு வெளியே வந்தாள்.

"நான் ஒரு எட்டு கோவிலுக்கு போயிட்டு வந்துடரேங்க... மனசு பாரமா இருக்கு.." என்று கிளம்பினாள்.

===============
ரிரு...
===============

ஷக்தியின் வீட்டில் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு வாழ்க்கை திரும்ப ஆரம்பித்தது. சரசுவிற்கு ஷக்தி மேல் இருந்த கோவம் மறுநாளே தனியத்துவங்கியது.

"அவளுக்கு எண்ண சோலியோ என்னவோ... பொண்ணு அழுதுட்டே தாங்க போச்சு.. பாவம். எண்ண பண்ணுதோ...". நடராஜன் சிரித்துக்கொண்டார்.

"பூரணி இப்போலாம் ரொம்ப போருப்பாகிட்டங்க.. வீட்டு கணக்கு எல்லாமே அவ தான் பதுக்கரா.. அந்த புள்ளைக்கு மட்டும் அந்த ரகுவோட கல்யாணம் அகிருந்துதுன்னா நல்லா இருந்துருக்கும் இல்ல?"

===============
மாதங்...
===============

.................

"என்னங்க... அன்னைக்கு சொல்லிடு இருந்தேன்ல.. அந்த ரகு பையன் இன்னைக்கு வந்தாங்க. பூரணிய பாக்க.."

"பூரணி அம்மாவும் இவனும் நல்லா பேசிட்டு இருந்தாங்க... நான் போகல ஆனாலும் கேட்டுது. நல்லா பையன் தான். ஆனா அவன் அப்பா இப்போ பிரெச்சனை பண்றாராம். ஆனா சரி பண்ணிடறேன்னு சொன்னான். இது மட்டும் அமைஞ்சதுன்னா ரொம்ப நல்லா இருக்கும்.. கடவுளே."

"எப்படி இப்போ த்டீர்னு வந்தான் அவன்?" என்றார் நடராஜன்

"நம்ம பூரணிக்கு என்னங்க கொறை.. அதான் கேரங்கிட்டு வந்துட்டான்." என்று பெருமிதப்பட்டாள்

............

"சக்திக்கு இந்த விஷயத்த சொன்னாங்களா?", என்று முதன் முறையாக ஷக்தியைப்பற்றி திடீரென்று தனாகக்கேட்டார் நடராஜன்.

"தெரியலைங்க."

"இன்னும் ஏன் வீண் ஜம்பம்..சுமூகமா போகலாம்ல?"

.............

"என்ன கேட்டா சக்தியோட புருஷன் தான் வீம்பு பண்றான்னு தோணுது. அவன் வந்து ஒரு வார்த்த பேசிருக்கலாமே? எல்லாம் முடிஞ்சுருக்கும்.. இல்லையாங்க?"

"யாருக்குடி தெரியும்...ம்ம் பாப்போம்.. என்னதான் நடக்குதுன்னு.."

===============
கள்...
===============

நடராஜனை அன்று வெகுநாட்கள் கழித்து அலுவலக தொலைபேசி அழந்த்தது.

"ஹலோ"

"ஹலோ..என்னங்க, நம்ம சக்திக்கு ரோட்ல அடி பட்ருச்சாம்.. பயங்கர ரத்தமாங்க.."

"என்னடி சொல்ற?"

"ஆமாங்க.. நம்ம அரசாஸ்பத்திரிலதான் இருக்கலாம். நீங்க ஒரு எட்டு பாத்துருங்க போய்... நான் வெளில போயிருந்தேங்க..."

"இருடி இரு.. நான் வேலைல இருக்கேன்.."

அவன் சொல்வதை மதிக்காமல், ".. அப்போ இவங்களுக்கு போன் வந்துருக்கு.. பக்கத்து வீட்ல சொல்லிடு போயிருக்காங்க .. என்னாச்சோ ஏதாச்சோ தெரியலைங்க.. நீங்க ஒரு எட்டு பாத்துட்டு வந்துடுங்க.. நான் பக்கத்து வீட்டுக்கு வந்து பேசிட்டு இருக்கேன்.. நீங்க அங்க போய் பாத்துருங்க.. நான் கோவிலுக்கு போயிடு ஒரு வேண்டுதல் பண்ணிட்டு வர்றேன்.."

"கொஞ்சம் இரு சரசு.. எனக்கு வேலை..."

"நீங்க அங்க போய் சேந்ததும் நம்ம அன்பு .."

"இருக்கும்மா... அவளுக்கு..."

"..வீட்டுக்கு போன் பண்ணி சொல்லுங்க நான் ஒரு வேளை இங்க.."

"ஒன்னும்.."

"..இருந்தா பேசறேன்.... போயிருங்க...வரேன்.." .. பட்...

"..ஆகிருக்காது.." என்று துண்டிக்கப்பட்ட தொலைபேசியை காதில் இருந்து எடுத்து ஒரு வெற்றுப்பார்வை பார்த்து, பின், வைத்தான்.

...........

அரசு மருத்துவமனை.

நடராஜனுக்கு எதோ ஒட்டவில்லை. அவன் ஏன் அங்கு வந்தான்? எங்கே, யாரிடம் கேட்பது? வாசலிலேயே கொஞ்ச நேரம் நின்றான். நூற்றுக்கணக்கில் மக்கள். துக்கம் இழந்த கண்கள். மஞ்சள் பை உறவுக்காரர்கள். உள்ளே ஹார்லிக்ஸ் அல்லது ஆரஞ்சு பழங்கள் . டிபன் கேரியர் மனைவிமார்கள். ஒரு கண் மூடிய தாத்தா/பாட்டிகள். பொதுவாக கொஞ்சம் மருந்தும் சாக்கடையும் பினாயிலும் கலந்த காற்று. அழுக்கு.

இதில் யாரைப்பார்ப்பது? எப்படி ஷக்தியை கண்டுபிடிப்பது?

சிப்பந்தி ஒருவரிடம் கேட்டதில் "நேர போயி பீச்சாங்கையாண்ட திரும்பினேன்னா வெள்ளை குல்லா பொட்டுனு ஒரு அம்மா உக்கானுருக்கும். அதாண்ட கேளு". என்றார்.

வெள்ளை குல்லா பெண்மணி சொன்ன இடத்தில் போய் பார்த்தார் நடராசன். 'அது சக்தியின் அம்மாதானா?' அவளையும் பூரணியையும் நன்றாக தெரியும் அவருக்கு. அவர்கள் அம்மாவை அவ்வளவாக பழக்கம் இல்லை.

அருகில் வாட்ட சாட்டமாக ஒரு இளைஞன் இருந்தான். இவன்தான் சக்தியின் கணவனா? போய் கேட்கவும் தயக்கமாக இருந்தது. அருகே மெதுவாக சென்றார்.

அப்போது நல்லவேளையாக பூரணி வந்தாள். இவரை கவனிக்கவில்லை. நேரே அம்மாவிடம் சென்று ஏதோ பேசிக்கொண்டிருந்தாள். அவர்கள் இருவரும் கண்ணாடி வழியே உள்ளே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

தனது பயத்தையும் தயக்கத்தையும் மீறி அவர் கார்த்திக்கிடம் சென்று ,"தம்பி நீங்க தான் சக்திய கட்டிகிட்டவரா?", என்றார்

"ஆமாம்"

"கவலை படாதிங்க தம்பி.. சக்தி நல்ல பொண்ணு. ஒன்னும் ஆகாது..", அவனது தோளில் கை வைத்து ஆறுதல் சொன்னார்.

"சார் யார் சார் நீங்க? எனக்கு தெரியும் எல்லாம்.. நேரம் கெட்ட நேரத்துல.." என்று அவரது கையை சிலுப்பிக்கொண்டு உதறி, விருட்டென்று வெளியே சென்றான்.

அவர் பூரணியைப்பார்த்தார். பூரணி,"ஒரு பத்து நிமிஷம் இருங்க அங்கிள் இதோ வரேன்" என்று தனது அம்மாவை சமாதானப்படுத்த சென்றாள்.

கவலையும் நிராகரிப்பும் சேர்ந்து எதோ செய்தது நடராஜனை. கதவின் வழி ஷக்தியைப்பார்த்தார். தலையில் கட்டு போட்டிருந்தார்கள். மூக்கில் கையில் எல்லாம் எதோ குழாய் வைத்திருந்தார்கள். பார்க்க முடியவில்லை.

அங்கிருந்து வெளியே வந்துவிட்டார். 'அவள சொல்லணும்.. எதோ ரொம்ப ஆடினாளே.. சக்தி சக்தின்னு.. இப்போ நம்மள யாருமே மதிக்கல. அவங்கவங்களுக்கு அவங்க அவங்க வாழ்கை.இது ஏண்டி உனக்கு புரியலை? அடுத்தவன் மேல எதுக்கு அவ்வளவு அக்கறை? ', என்று சரசு விடம் மானசீகமாக பேசிக்கொண்டே ஒரு தொலைபேசி பூத்தில் இருந்து அவரது பக்கத்து வீட்டு அன்புவை அழைத்தார்.

"சொல்லுங்கண்ணே ", அன்பு.

"சரசு வந்தாளாப்பா.."

"அண்ணி வந்துச்சு.. சக்தி எப்டி இருக்குண்ணே?"

"கொஞ்சம் மோசமாத்தான் அடி பட்டிருக்கு. சரசுவை கூப்பிடேன்"

"அண்ணி கேளம்பிருச்சே! எதோ கோவில்ல பூச பண்ணி துண்நூருலாம் கொண்டு வருது."

"ஓ.. சரிப்பா."

"ஏதும் பிரச்சனையாண்ணே?"

"இல்லப்பா வரட்டும்."

தொலைபேசியை துண்டித்துவிட்டு "எப்போ சரசு திருந்தப்போற?" என்று காற்றோடு பேசினார்.

...................

"எங்கம்மா போகணும்?"

"ஆஸ்பத்திரி."

"ரெண்டம்பது"

கைகளில் பிரசாதத்தை இறுக பிடித்துக்கொண்டு வெற்றுப்பார்வையோடு - சரசு. பேருந்து அரசு மருத்துவமனையை நோக்கி சென்றது.

********
படம் முடிந்து அனைவரும் மகிழ்ச்சியாக திரும்பினார்கள். 2000 வருடத்தின் மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் ஹிட்.விகடனில் 44 மார்க்.





*******

"என்னங்க.. சக்தி கொழந்தைக்கு இன்னைக்கு காது குத்தாம். போயிட்டு வந்துடலாமா?"

====================================================================