Saturday, September 7, 2013

கவிதை அல்ல.. ஆக்கிக்கொள்ளலாம்... - 21

எல்லா அம்மாக்களுக்கும் 
எட்டிவிடுகிறது நிலவு,
தன் குழந்தைக்கு உணவூட்ட..

நேற்று உண்ட நிலவை 
இட்லியென்றொ, 
தச்சி மம்மு என்றோ, 
லாக்டோஜன் என்றோ,


உணரும் தருணம் 
தொலைந்து விடுகிறது - நிலவோடு சேர்ந்து 
குழந்தையும்..

அம்மாக்களுக்கு மட்டும்,
எப்போதும் நிலவு,
எட்டிவிடும் தூரத்தில்..

Wednesday, September 4, 2013

கவிதை அல்ல.. ஆக்கிக்கொள்ளலாம்... - 20


சுடும் வெயிலை
சகித்துக்கொள்ளலாம் 

கொட்டும் மழையில் 
நனைந்தும் விடலாம்..

இந்த பாழாய்ப்போன 
தூரலைத்தான் 
என்ன செய்ய? தெரியவில்லை..

Tuesday, September 3, 2013

ஒரு வரி விமர்சனம்: தங்க மீன்கள்







தங்க மீன்கள் - வெறும் கவரிங்!
தன் இயலாமையை உணராமல் வெற்றி பெறும் சமூகத்தின் மீது பழி சொல்லும் இடதுசாரி சிந்தனையின் கதைப்படம்.

Sunday, September 1, 2013

புரிதல்

(படித்ததில் பிடித்தது)


பிறந்த பின்
ஆண்டுகள்
ஓடிய பின்னர்
புரிந்துகொண்டேன்
பிறந்தேன் என்பதை

நிகழ்தலில் இல்லை
நிகழ்வது என்பது
புரிதலின்போதே
நிகழ்தல் அறிந்தேன்

காதல் செய்ததோ
இருபது வயதில்
காதல் உணர்ந்ததோ
ஐம்பது வயதில்



Who I Am

வாழ்தலில் இல்லை
வாழ்க்கை என்பதும்
வாழ்தல் முடிந்த பின்
வாழ்க்கை உணர்தலும்
வாழ்க்கையின் முழுமை
என்பதை அறிந்தேன்

எனில்,
சாதல் அடைந்த பின்
சாதலே இன்றி
இருப்பதும் நிஜம் எனில்
இறந்திட மாட்டேன்!

- பா.கிருஷ்ணன்