Friday, August 31, 2012

குட்டிக்கதை - 1



 பெங்களூரில் இருந்து விடுமுறைக்கு வந்திருந்த என் மகன், மருமகள் பேரனோடு கோவிலுக்குச்சென்றிருன்தேன். சன்னதியில் அபிஷேகம் நடந்துகொண்டிருந்தது.

"தாத்தா வாட்ஸ் ஹாப்பனிங்?"

"வின்னி.. ஷூ..சும்மா இரு" என்றாள் என் மருமகள்.

"இருக்கட்டும்மா..இதெல்லாம் எப்போ பாக்க போறான். கேக்கட்டும்.. வின்னி கண்ணா. நாமல்லாம் டெய்லி குளிக்கற மாதிரி கடவுளும் குளிக்க வேண்டாமா. அதான் பண்றாங்க."

"வாட்ஸ் தட் யெல்லோ லிக்விட்?"

                               

"தட்ஸ் கால்ட் டர்மரிக். நாம சோப்பு போடறோம் இல்ல? அது மாதிரி."

அபிஷேகம் முடிந்து அலங்காரத்திர்க்காக திரையை மூடினார்கள். 

"இப்போ வாட்ஸ் ஹாப்பனிங்?"

"டேய் வின்னி லீவ் தாத்தா அலோன்"

"இருடா கேட்டுட்டு போறான்.. வின்னி.. கடவுள் குளிச்சார்ல. இப்போ அவங்கள்ளாம் அவருக்கு அலங்காரம் பண்றாங்க.."

"வாட்ஸ் அலங்காரம்?"

"அலங்காரம் இஸ்... டெக்கரேஷன்..."

"டெக்கரேஷன்?"

"வின்னி டிரஸ் போட்டு விடறாங்க.. நவ் தட்ஸ் எனப்.. அப்பா இவன் இப்படித்தான்.. நீங்க பேச பேச அவனும் கேள்வி கேட்டுட்டே இருப்பான்.."

வின்னியின் முகத்தில் எதோ ஒரு கேள்வி மிச்சம் இருந்தது. நான் என் மகனை பொருட்படுத்தாமல், "என்ன கண்ணா?" என்றேன்.

"இட்ஸ் ஸ்டுபிட்! தே லெட் அஸ் வாட்ச் ஹிம் டேக் பாத். பட் வோண்ட் லெட் அஸ் வாட்ச் ஹிம் டிரஸ்?"

திரை விலகியது.

Monday, August 20, 2012

க(வி)தை அல்ல.. ஆக்கிக்கொள்ளலாம்... - 14

"நயாகரா நயாகராதாண்டா..
பாறைல தெறிக்கும் தண்ணீலயே நனைஞ்சுருவோம்னா பாரேன்.."

"நியூ யார்க்ல இருக்கற சரவண பவன்ல 
நம்மாள் தாண்டா கல்லா கட்டிக்கிட்டு இருக்காரு!"



"அத்த ஏன் கேக்கற..
நூத்தி பத்தாவது மாடில இருந்து எட்டிப்பாக்கரப்போ 
ஒன்னுக்கு வந்ததுதான் மிச்சம்.."

"கொடைக்கனலு என்னடா கொடைக்கனலு..
அங்க சும்மா சுள்ளுன்னு குளுரும் தெரியுமுல்ல?!"

"இந்தா பத்தியா?
நானும் மிக்கி மவுசும் எடுத்துக்கிட்ட போட்டோ!"
காட்டிய புகைப்படத்தில் அவனோடு 
எட்வர்டையோ ஜானயோ மறைத்துக்கொண்டிருந்த 
மிக்கியின் முகமூடியும் சிரித்துக்கொண்டிருந்தது 



"ரோடுன்னா ரோடு..நம்ம ரிங் ரோடுல்லாம் நக்கிட்டு போகணும்..
சோறு போட்டு சாப்பிடலாம்! 
நம்ம ஊர்க்காரனுங்க தேரனும் மாப்ள!"

"இந்த கிராண்ட் கான்யான்ட்றாங்ய..
அத மட்டும் பாத்துட்டோம்னா ஊருக்கு வந்துடலாம்"

"பேசாம நீயும் வந்துட்றா.. 
இங்க இருந்து என்னாத்த கண்ட
வெய்யிலும் புழுதியும்.."

முடிவு 1:

"அதெல்லாம் இருக்கட்டும்டா 
பொங்கல் வரைக்கும் இருந்துட்டு போறது!"

"இல்லடா மாப்ள.. ஆபீஸ்ல பீட்ஸா பார்ட்டி..
வர்ஷா வர்ஷம் நடக்கும்..
மேனேஜர்  கோவிச்சுக்குவாப்டி "

முடிவு 2:

"அதெல்லாம் இருக்கடுமடா..
வா ஜிகிர்தண்டா சாப்டலாம்."



"இல்ல மாப்ள இப்போல்லாம் 
ஜிகிர்தண்டாவ வயிறு சேத்துக்க மாட்டேங்குது.."

முடிவு 3:

என் நண்பன் என்னவெல்லாமோ பேசிக்கொண்டிருக்கையில் 
அவன் பன்னிரண்டாம் வகுப்பில்
என்னைவிட குறைவாய் 
மதிப்பெண் எடுத்ததே 
அடிக்கடி நினைவில் வந்து போனது..


Sunday, August 19, 2012

How much does Maggie Simpson cost?


Question: How much does Maggie Simpson cost in the opening credits of The Simpson?
Answer: If you use the pause function efficiently in VLC or GOM, you will see that Maggie costs $847.63. But why? Its a figure once given as the amount of money required to raise a baby for one month in the United States.


Tuesday, August 14, 2012

கற்றதும் பெற்றதும்..

மே மாதம் மூன்றாம் தேதி, எனக்கு எழுபது வயது நிறைகிறது. இதற்கான அடையாளங்கள் என்ன என்று யோசித்துப் பார்க்கிறேன். மெரீனாவில் நடக்கும்போது எதிர்ப்படுபவர்கள் பெரும் பாலும் என்னைவிட சின்ன வயசுக்காரர்களாகத் தெரிகிறார்கள். ஒரு தாத்தா மாட்டினார். நிச்சயம் என்னைவிட மூத்தவர். சிமென்ட் பெஞ்சில், என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார்.

"யு ஆர் எ ரைட்டர்! எனக்கு எத்தனை வயசு சொல்லுங்க, பார்க்கலாம்!" என்று கண் சிமிட்டலுடன் கேட்டார்.


நான் யோசித்து, ‘‘கட்டை விரலால் மூக்கைத் தொடுங்கோ" என்றேன்.

"எதுக்குப்பா?"

"தொடுங்களேன்!"

சற்று வியப்புடன் தொட்டார்.

"மத்த விரல்களை றெக்கை மாதிரி அசை யுங்கோ!" என்றேன். ‘‘இதிலிருந்து கண்டுபிடிச்சுட முடியுமா, என்ன? என்று, விரல்களைச் சொன்னபடி அசைத்தார்.

"ரெண்டு கையையும் பரப்பி, ஏரோப்ளேன் மாதிரி வெச்சுண்டு ஒரே ஒரு தடவை லேசா குதிங்கோ. பாத்து... பாத்து..."

"இது என்னப்பா ட்ரிக்கு?" என்று அப்படியே செய்தார்.

"உங்களுக்கு இந்த மே பன்னண்டு வந்தா எண்பத்தோரு வயசு!" என்றேன்.

அசந்து போய், "கை குடு. எப்படிப்பா இத்தனை கரெக்டா சொன்னே?"

"ஒரு ட்ரிக்கும் இல்லை, சார்! நேத்திக்குதான் இதே பெஞ்சில், இதே சமயம் வந்து உட்கார்ந்து, உங்க வயசு, பர்த்டே எல்லாம் சொன் னீங்க. மறந்துட்டீங்க!" என்றேன். தாத்தா மாதிரி அத்தனை மோசம் இல்லை என்றாலும், எனக்கும் சமீபத்திய ஞாபகங்கள் சற்றே பிசகுகின்றன. ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்குச் சென்றால், எதற்காக வந்தோம் என்பது மறந்தே போகிறது. பெயர்கள் ஞாபகம் இருப்பதில்லை. ஆந்தைக்கு இங்கிலீஷில் என்ன என்று சட்டென நினைவு வருவதில்லை. ‘படையப்பா’வில் ரஜினிக்கு முன்னால் கால் போட்டுக் கொண்டு உட்கார்ந்தாரே... அந்த நடிகை யின் பெயர் என்ன என்று ஒரு நாள் அதிகாலை கண் விழித்ததும், ஒரு மணி நேரம் யோசித்தேன், கிட்டவில்லை.

மனைவி எழக் காத்திருந்து அவளிடம் கேட்டேன். "ரம்யா கிருஷ்ணன்" என்றாள். இம்மாதிரி, நியூரான்கள் களைத்துப் போவது தெரிகிறது. ஆனால், நீண்ட நாள் ஞாபகங்கள் பத்திரமாக இருக்கின்றன. அது மூளையில் வேறு பேட்டை போலும்! கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு முன், சின்ன வயசில் கோயமுத்தூரில் அம்மா அப்பாவுடன் ஜட்கா வண்டியில் "ஜகதலப்ரதாபன்" சினிமா போனது, ஒண்ணாம் கிளாஸ் டீச்சருக்கு ஆனந்த விகடனும், அமிர்தாஞ்சனும் கொண்டு போய்க் கொடுத்தது, பள்ளி மணியை அகாலமாக அடித்தது, எனக்குத் தம்பி பிறந்தது... இதெல்லாம் தெளிவாக ஞாபகம் உள்ளது. ஸ்ரீரங்கத்துக் கதைகள் அனைத்தும் என் நீண்ட நாள் ஞாபகங்களின் வடிவம்தான்!

டெல்லியில், பெட்ரோல் எழுபத்தைந்து பைசாவும், பால் ஐம்பத்தைந்து பைசாவும் கொடுத்து வாங்கி தாராளமாக வாழ்ந்தது, என் முதல் கதை, முதல் நாவல் பிரசுரமானது, எஸ்.ஏ.பி'யின் கடிதக் குறிப்பு எல்லாம் ஞாபகம் உள்ளது. ரம்யா கிருஷ்ணன் போன்ற மேட்டர்தான் சட்டென்று வழுக்கிவிடுகிறது.





மெரீனாவில், ஷார்ட்ஸ் ஸ்னீக்கரில் ஓடும் இளைஞர்களைப் பார்த்து முன்பு பொறாமைப்படுவேன். இப்போது புன்னகைக்கிறேன். பொதுவாகவே, பொறாமைப்படுவதற்கான விஷயங்களும், அதட்டிச் சொல்வதற்கான விஷயங்களும் குறைந்து வருகின்றன. ஹிந்துவின் "ஆபிச்சுவரி" பார்க்கையில், இறந்தவர் என்னைவிட சின்னவரா, பெரியவரா என்று முதலில் பார்ப்பேன். சின்னவராக இருந்தால், ‘பரவால்லை... நாம தப்பிச்சோம்!’ என்றும், பெரியவ ராக இருந்தால் கழித்துப் பார்த்து, ‘பரவால்லை... இன்னும் கொஞ்ச நாள் இருக்கு என்றும் எண்ணுவேன். எதிர்காலம் என்பதை இப்போதெல்லாம் வருஷக் கணக்கில் நினைத்துப் பார்ப்பது இல்லை. மாதக் கணக்கில்... ஏன், உடம்பு சரியில்லாமல் இருக்கும்போது வாரக் கணக்கில், நாள் கணக்கில் அந்தந்த நாளை வாழத் தோன்றுகிறது.

இறந்ததும் என்ன ஆகிறது என்பதைப் பற்றி நசிகேதனைப்போல யோசிக்கும் போது, சட்டென்று ஒரு திடுக்கிடல் ஏற்படும். அந்தச் சமயத்தில் மல்லிகை வாசனையையோ, ஒரு குழந்தையின் புன்சிரிப்பையோ எண்ணிப் பார்த்துக் கவனத்தைக் கலைத்துக்கொள்வேன். சொர்க்கம், நரகம் இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. இரண்டும் இங்கே தான் என்று எண்ணுகிறேன். அப்படி ஒருக்கால் இருந்தால், நரகத்துக்குப் போகத்தான் விரும்புகிறேன். அங்கே தான் சுவாரஸ்யமான ஆசாமிகள் இருப்பார்கள். சொர்க்கத்தில், நித்ய அகண்ட பஜனைச் சத்தம் எனக்கு ஒரு நாளைக்கு மேல் தாங்காது.

ஆரம்பத்தில் இளைஞனாக இருந்த போது, ஏரோப்ளேன் ஓட்டவும், கித்தார் வாசித்து உலகை வெல்லவும், நிலவை விலை பேசவும் ஆசைப்பட்டேன். நாளடைவில் இந்த இச்சைகள் படிப்படி யாகத் திருத்தப்பட்டு, எளிமைப்படுத்தப் பட்டு, எழுபது வயதில் காலை எழுந் தவுடன் சுகமாக பாத்ரூம் போனாலே சந்தோஷப்படுகிறேன். வாழ்க்கையே இவ்வகையில் progressive compromise.. (படிப்படியான சமரசங்களால் ஆனது).

 சுஜாதா

Monday, August 13, 2012

கவிதை அல்ல.. ஆக்கிக்கொள்ளலாம்... - 13




கீழே ஒரு நீள் செவ்வகம் விட்டு,
மேலிருக்கும் இரு 
முனைகளிலும் 
முக்கோணம் செய்து..

விடப்பட்ட செவ்வகத்தை இரு புறமும்
நூற்றெண்பது டிகிரி மடக்கி,
நீட்டி நிற்கும் தாளினை மீண்டும்  மடக்கி,
சதுரமாக்கி..




பாதியை மடக்கி,
மீதியை பின் மடக்கி,
மேலும் மடக்கி,
கீழும் மடக்கி,
விரித்து - ஒரு வழியாக 

கப்பலாகிப் போன
டைரியின் நடுப்பக்கத்தில்
என்ன எழுதப்பட்டிருக்கும்
இப்பெருமழை பெய்திருக்காவிடில்?

Friday, August 3, 2012

பின்னோட்டம்


அப்பா சொன்ன பேச்சை 
கேட்டிருந்தால்?

பன்னிரண்டாம் வகுப்பில்
இன்னும் கொஞ்சம் முயற்சி செய்திருந்தால்?

அந்த விபத்தை எப்படியாவது
தவிர்த்திருந்தால்?

அவளை சந்திக்காமலே 
இருந்திருந்தால்?

சுயமாய் முன்பே 
சிந்தித்திருந்தால்?



தமிழை முறையே 
பயின்றிருந்தால்?

இப்படியாக
எண்ணியபடி தூங்கிப்போன ஒரிரவின்
அற்புதமான கனவில்:-

பத்தாண்டுகள் பின்னோடி,
அப்பாவின் சொல் கேட்டு,
மூச்சுத்திணறப் பாடம் படித்து,
அவளோடு முதல் பார்வை தவிர்த்து,
விபத்தன்று வீட்டிலேயே முடங்கி,
தமிழை முழுதாய் பயின்று,
சுயமாய் முடிவெடுத்து,


பின்
நகரத்தின் வேறோர் மூலையில்
படுத்தபடி
பட்டியலிட்டுக்கொண்டிருந்தேன்
எதை எதையோ
தவிர்த்திருக்கலாமே என்று...