Friday, August 3, 2012

பின்னோட்டம்


அப்பா சொன்ன பேச்சை 
கேட்டிருந்தால்?

பன்னிரண்டாம் வகுப்பில்
இன்னும் கொஞ்சம் முயற்சி செய்திருந்தால்?

அந்த விபத்தை எப்படியாவது
தவிர்த்திருந்தால்?

அவளை சந்திக்காமலே 
இருந்திருந்தால்?

சுயமாய் முன்பே 
சிந்தித்திருந்தால்?



தமிழை முறையே 
பயின்றிருந்தால்?

இப்படியாக
எண்ணியபடி தூங்கிப்போன ஒரிரவின்
அற்புதமான கனவில்:-

பத்தாண்டுகள் பின்னோடி,
அப்பாவின் சொல் கேட்டு,
மூச்சுத்திணறப் பாடம் படித்து,
அவளோடு முதல் பார்வை தவிர்த்து,
விபத்தன்று வீட்டிலேயே முடங்கி,
தமிழை முழுதாய் பயின்று,
சுயமாய் முடிவெடுத்து,


பின்
நகரத்தின் வேறோர் மூலையில்
படுத்தபடி
பட்டியலிட்டுக்கொண்டிருந்தேன்
எதை எதையோ
தவிர்த்திருக்கலாமே என்று...

No comments:

Post a Comment