Wednesday, January 18, 2012

மழை வகை - Vikatan Kavithai


நேற்று பெய்த மழை
ஸ்ருதியினுடையது.
'தண்ணி நூல்’ என்று
பெயர் வைத்திருந்தாள்.

இன்றைய மழை
அமுதா பாப்பாவினுடையது.
'டம் டம்’ என்பது
அதன் பெயர்.

நாளைய மழைக்கு
'ரெயின்’ எனப் பெயர்வைத்துக்
காத்திருக்கிறான்
டிச்சாங்கா எனப்படும்
த்ரிஷாங்கன்.

காலங்காலமாக
கனகோடி நூற்றாண்டாக
வையத்தை வாழ்விக்க
பெய்யெனப் பெய்யும்
இந்தப் பெருமழை
புன்னகையோடு
பிள்ளைகள் வைக்கும்
பெயருக்காகவும்
பெய்யுமோ!

- ஸந்த்யா ஸ்வரூபன்

No comments:

Post a Comment