Thursday, August 11, 2011

நட்பு தேசம்

நட்பின் தேசத்தில்
பாலினம் உட்பட,
வித்தியாசங்கள் உணரப்படுவதில்லை

அங்கே வாழ்பவர்கள்
தேவனால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்

******

நட்பும், அது சார்ந்த காயங்களும்
இல்லாத மனிதன் உண்டா?

சொல்ல நினைத்து
சொல்லாமல் விட்ட வார்த்தைகளில்...

கேட்க நினைத்து
கேளாமல் விட்ட கேள்விகளில்..

அருகிலிருந்தும்
மெளனமாய்க் கடத்திய நிமிடங்களில்...

தவறான புரிதல்களால்-அன்பைத்
தவற விட்ட தருணங்களில்...

இன்னும் உள்ளாறாமல் இருக்கின்றன
நம் நட்பின் காயங்கள்!

அவை அனைத்தும் நடப்பின் நீளங்கள்..





தட்டுவதற்கு அவசியமின்றி
திறந்தே கிடக்கிறது நடப்பின் கதவு...

அங்கு
கேட்கப்படும் முன்பே அனைத்தும்
தரப்படுகிறது

நட்பில், வார்த்தைகளின் வன்முறை இல்லை..
மௌனத்தின் கொடூரங்கள் இல்லை...

நம்மில்தான் இருக்கிறது...

உண்மையான நட்பு
நம்மை விட்டு விலகுவதுமில்லை
கை விடுவதுமில்லை...

4 comments:

  1. Simply superb bharathi... Chithi

    ReplyDelete
  2. குட்டி, எப்டிறா? சூப்பர். Translated poems are also so nice. நட்பு கவிதை excellent. Keep on writing and reading. Your dream will come true.
    அம்மா, அப்பா.

    ReplyDelete