Sunday, August 16, 2009

ஹாப்பி பெர்த் டே!

வருடாவருடம்
வந்து போகும் என் நாள்
வழக்கத்திற்கு மாறாய்
பிரம்மிப்பின் வாசலில்
இழுத்து நிறுத்தியிருக்கிறது
என்னை!

நேற்றைய நள்ளிரவில்..

இதுவரை நானறிந்திராத
திசைகளினின்று நீண்டு...

கதகதப்பாய்
என் விரல் கோர்த்த கரங்கள்...

கைகுலுக்கிய தோழமைகள்...

இதம் நிறைத்த
தலைகோதல்கள் எல்லாம்..

என் இருப்பை முழுதாய்
அர்த்தப்படுத்திப் போயிருக்கின்றன!

துக்கத்தில் தூக்கம் தொலைத்த
இரவுகள் உண்டு...
மிதமிஞ்சிய மகிழ்வும்
உறங்க விடாதென்ற உண்மை
விளங்குகிறது இப்போது..

வாழ்த்துச் சுமந்து வந்த
வார்த்தைகள் எல்லாம்
பூக்களாய் மலர்ந்து
மணம் பரப்புகின்றன மனதிற்குள்...

திக்கெங்கிலும்
நிரம்பி வழியும் அன்பினை
சேர்த்தெடுக்கத் தவிக்கிறேன்...

இதயம் மலர்ந்து...
கண்கள் பனிக்க...

'என்றும் என்னோடிருங்களெ'ன
வேண்டுவதைத் தவிர்த்து
வேறொன்றும்
சொல்லத் தோன்றவில்லை
இப்போது!




------->>>>>> http://www.youtube.com/watch?v=yyUItb3tRrk <<<<<<<<------------

வியப்பாயிருக்கிறது! சில மாதங்கள் முன்பு வரை நானும் தனிமையும் மட்டுமாய் நிரப்பியிருந்த என் நாட்கள் இப்போது எல்லைகள் கடந்த தொடர்புகளோடு கண்முன் விஸ்வரூபமாய் விரிகின்றன. இத்தனை வருடங்களில் எந்தப் பிறந்தநாளும் இப்படி வாழ்த்துக்களால் நிரம்பி வழிந்ததாய் நினைவிலில்லை!
இவ்வளவு அன்பும் எனக்கே எனக்கா என்ற திகைப்பு மேலிட பூரிப்பில் திளைத்திருக்கிறேன்.

இரவு 8 மணியிலிருந்து ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை போனில் வாழ்த்திக்கொண்டேயிருந்த அப்புஹய் மிகச்சரியாய் இரவு 12 மணிக்கு... வழக்கம் போல தூங்கிப்போனாள்!!

நள்ளிரவில் வாழ்த்து சொன்ன வினோ! வாய்ஸ் மெயில்லில் 'ஹாப்பி பெர்த் டே!" பாடிய பூக்கா :)

நடுநிசியில் குறுந்தகவல் அனுப்பி விடியும் வரை யாராயிருக்குமென யோசிக்க வைத்து அதிகாலையில் உற்சாகம் மிகுத்து பாசமாய் வாழ்த்தினாள் ஜி3.
சொந்த ஊருக்கு போயிருக்கும் ஜி நியாபகமாய் வாழ்த்தியது வியப்பு!

மாமா அதை சித்தி சித்தப்பா தங்கைகள் தம்பிகள் இந்திய நண்பர்கள்... ஐ.எஸ்.டி. போட்டு வாழ்த்து சொன்னார்கள்.

அப்பாவின் கவிதையும் அம்மாவின் கடிதமும் இதம் சேர்த்தது! நான் அதிக நாட்கள் இங்கு (சிகாகோ) இருக்க முடியாமல் தடுப்பது இவைகள் தாம் :)

அனைத்திற்கும் மேலாக எனது நண்பர்கள் என்னுடைய பிறந்தநாளை கடற்கரையில் கொண்டாடியது. சில சமயம் சந்தோசத்திலும் மனம் கணமாகும். அது அத்தகைய தருணம். உணர்ச்சிகள் குவியலாய் வந்தாலும் அதை வெளிக்காடக்கூட நேரம் இல்லாமல் எனது நண்பர்களை ரசித்துக்கொண்டிருந்தேன்.அவ்வளவு அழகாய் இருந்தது அந்த மாலை... முதன்முதலாய் சிகாகோவும் அன்று எனக்க்குப்பிடிதிருந்தது!

அனைத்திற்கும், அனைவருக்கும் இங்கு என் அன்பைச் சொல்லிக் கொள்கிறேன். நன்றியிலும் நெகிழ்விலும் நிறைந்திருக்கிறேன்.. இன்று மீண்டும் புதிதாய்ப் பிறந்திருக்கிறேன்!!

பி.கு. : இவ்வளவு நாள் ஏன் நான் அன்பினால் நன்றி செய்யவில்லை என்று தெரியவில்லை. அனால் இனியும் செய்யவில்லை என்றல் என்னால் தூங்கக்கூட முடியுமா? தூக்கம் இழந்த இரவுகள் போதும்.. இனி சந்தோஷ நிம்மதியில் தூங்குவேன்... மீண்டும் - "என்றும் என்னோடிருங்கள்!!" என்று வேண்டுவதைத்தவிர வேறு என்ன செய்ய?? தெரியவில்லை....

3 comments:

  1. lyk d way u have xpressed..and v guys din think tht u will njoi it so much!!3 cheers to all of us!! :)

    n 1 correction..i did wish u at 12 b4 i slept off!! x-(

    ReplyDelete
  2. Typical bharathi.. Dei nee oru 21st century bharathi da :)

    ReplyDelete