Sunday, February 14, 2010

உதிர்தல்..


சில பிரியங்கள்
ஏற்கப்படுவதில்லை
சில பிரியங்களை
ஏற்கமுடிவதில்லை...

அடிக்கடி நினைத்துக்கொள்கிறேன்
ஏற்கப்படாத பிரியங்களும்,
எங்கோ கைவிடப்பட்டு
காற்றில் கிடந்தலையும் நேசங்களும்
பின் என்ன ஆகும் என்று

ஒவ்வொரு காலையிலும் தன் வாசலில்
பூக்களை பரப்பிக்கொள்ளும்
இந்த மரங்களைப்பார்க்கையில்
தோன்றுகிறது,

உடைந்து போனா நேசங்கள்
உதிர்ந்த பூக்களாகின்றன

சில நேரங்களில்
கவிதைகளாகவும்...

3 comments:

  1. Once again.. well done buddy..
    alaga irukku vaarthaiyum.. andha picture um

    ReplyDelete
  2. thanks da murali :) good to see that you are still following my blog

    ReplyDelete