Tuesday, June 23, 2009

'சிட்டி'சன்


நாரை நடக்கும்
குளத்தில்
நண்டு பிடிச்சதில்ல..

முங்கு நீச்சல்
போட்டியில்
மூச்சுத் திணறி எழுந்ததில்ல..

கண் பறிச்சு
வெல்லமிட்டு
வெடி தேங்கா தின்னதில்ல..

அடுக்குப் பானை
அரிசி திருடி
ஆற்றுச் சோறு ஆக்கியதில்ல..

நெளிந்தோடும் பாம்பு
தலைய
நாசூக்கா பிடிச்சதில்ல..

ராவெல்லாம் கண்முழிச்சு
வள்ளி திருமணம்
பார்த்ததில்ல..


மல்லாந்து மேகம் பாத்து
வயலை
வீடாக்கியதில்ல...

குளத்தங்கரையோரம்
குளிக்கும் பறவைகளை
குத்தவெச்சு ரசிச்சதில்ல..

நிலவைத்தட்டாக்கி
நட்சத்திரச்சோறுன்னு
கடலில் கை கழுவி
மேகத்தில் தொடச்சதில்ல...



இருளொழுகும் வேளயில
ஒத்தயடிப்பாதயில
“பேய் வருமோ? முனி வருமோ?”
திசைதொலச்சு நடந்ததில்ல...

கனவு கலைக்கும் நடு நிசியில்
கக்கத்தில் காதலி கண்டு
கண்ணும் கலங்கவில்ல...

ஆனாலும் சொல்கிறோம்
“I am living my life!!” என்று...

2 comments: