Tuesday, August 11, 2009

அன்பே வெங்கடாசலம் ..!

வெட்டவெளியில் தனியாய்
புலம்பியபடி நிற்கிறது
- ஒற்றைப் பனைமரமொன்று..

*****

எங்கோ வழிதவறி
மேசையின் பரப்பில்
பதறியலைகிறது
- ஓர் சிற்றெறும்பு...

*****

கோவிலில்,
சிந்தும் கண்ணீரை
எவருமறியாமல்
துடைத்துக் கொள்கிறாள் ...
- பிரகாரம் சுற்றும் பெண்

*****

இன்றேனும் தன் பிள்ளைக்கு
புது செருப்பு வாங்கித்தர வேண்டும் என்று தேய்கிறார்
- ஒரு தந்தை..

*****


*****

கலைக்கப்படும் என்று தெரியாமல்
கூடு கட்டிக்கொண்டிருக்கின்றன
- தேனீக்கள்..

*****

பறிக்கப்படும் என்று அறியாமல்
மலர்கின்றன
- பூக்கள்..

*****

தான் கடந்து வந்த பாதைகளை
காற்றோடு பேசிக்கொண்டிருக்கிறது
- கூரை மேல் வீசப்பட்ட சைக்கிள் டயர்..

*****

பேச்சிலும்...
மடல்களிலும்...
நியாபகக் குப்பிகளிலும்...
இட்டு நிறைத்த பின்னும்,
இன்னும் மிச்சமிருக்கும் காதலோடு காத்திருக்கிறான்
- ஒரு காதலன்..

*****

யாரும் வாழ்ந்திராத
அவ்வீட்டில்
எப்போதும்
- நிறைந்திருக்கிறது இருள்..

*****

எண்ணற்ற கனவுகளோடும்
கொஞ்சம் சிள்ளரைகளோடும்
எங்கோ தொடங்குகிறது
- ஒரு பயணம்..

*****

மெளனமாய்
கவிதைகள் எழுதிக் கொண்டிருக்கிறேன்
- நான்!

*****




அதைவிட மௌனமாய்
உறங்கிக்கொண்டிருக்கிறார்
- திரு. வெங்கடாசலபதி...


4 comments:

  1. Everybody have done their duty.
    Thats it.......
    Purpose should be served.

    Attach yourself only to action and do not succumb to inaction. The fruits and goals achieved by your action are not yours and detach from it....then life is heaven, victory is yours
    மக்கள் சேவையே மகேசன் சேவை. அதுபோல
    மக்கள் விழித்து கொண்டால் அரங்கனும் விழிப்பான்

    Comment four your verses

    ReplyDelete
  2. ganesh that was only a kavithai... but i was expecting this from you :)

    ReplyDelete
  3. good ones da.. "திரு. வெங்கடாசலபதி" - creative title machi..

    ReplyDelete