Friday, November 25, 2011

மயக்கம் என்ன?

(ஆனந்த விகடன் பாணியில் ஒரு முயற்சி)

தனுஷ், தன்னைப்பற்றி எதோ ஒரு படத்தில் சொன்னது உண்மைதான் போலும். அவரை பார்க்கப் பார்க்க பிடித்துதான் விடுகிறது. எனக்கு செல்வராகவநிடத்தில் ஒரு நிச்சயமில்லாத எதிர்பார்ப்பு இருக்கும். காதல் கொண்டேன், புதுப்பேட்டை - மிக நல்ல படங்கள். துள்ளுவதோ இளமை, ரெயின்போ காலனி - பிடிக்கவில்லை. ஆயிரத்தில் ஒருவன் நான் தியேட்டரில் சென்று பார்த்தேன் என்று சொல்லக்கூட கொஞ்சம் கூச்சமாக இருக்கும். கொடூரமான அனுபவம். தனது சகோதரனை வைத்து அவ்வளவு கொடுமையாக படம் எடுக்க மாட்டார் என்ற ஒரு சிறு நம்பிக்கையோடு படம் பார்க்க சென்றேன். நல்லவேளை சென்றேன். இம்மாதிரி படங்களை திரை அரங்கில் பார்ப்பது உசிதம். தனுஷ் பேசும் போது ரிச்சா குரல் வருவது, கொஞ்சம் தலையை கோணலாக வைத்துப் படம் பார்ப்பது, திடீரெண்டு திரையில் ஒரு நிழல் எழுந்து செல்வது/வந்து உட்கார்வது போன்ற அசௌகரியங்கள் இருக்காது. சினிமாடிக் எக்ஸ்பீரியன்ஸ் ரொம்ப முக்கியமாக படுகிறது எனக்கு.

சரி கதை என்ன? எனக்கு படத்தின் கதையை சொல்வது எப்போதும் பிடிக்காது. அதனால் வெறும் அவுட் லைன்.

ஒரு 'வைல்டு லைப் போடோக்ராபராக' தன்னை நிலைநாட்டிக்கொள்ள துடிக்கும் இளைஞனின் கதை. அவன் நண்பர்கள், அவன் சந்திக்கும் மனிதர்கள், அவன் காதல், அவனது ஏமாற்றம், விரக்தி, வீழ்ச்சி, எழுச்சி, இவை அனைத்திலும் அவன் காதல் என்ன ஆனது?.. அவ்வளதுதான்.

இதை எவ்வளவு எளிமையாக,ஆழமாக சொல்ல முடியுமோ அவ்வளவு எ.வும், ஆ.வும் சொல்லி இருக்கிறார் செல்வா. முக்கியமாக திரைக்கதையில் பின்னி எடுத்திருக்கிறார்.

(spoiler alert: if you want to see these scenes in the theater, please skip the next two paragraphs)

முதல் காட்சியில் திரை அரங்கை நோக்கி lights on செய்வது, நம்மை நோக்கி ஒரு காமெரா zoom in செய்வது, தனுஷின் ரெட் கார்பெட் கனவு, தனுஷ் எதோ ஒரு மீசை வைத்த அரசியல் வாதியை போட்டோ எடுக்கையில் கொரில்லா முகத்தை திரையில் பளிச் இடுவதில் தொடங்கி படம் நெடுக ஷொட்டுக்கள்.




எனக்கு மிகவும் பிடித்த பிற காட்சிகள் - 1 . தனது மானசீக குருவின் துரோகத்தால் மனமுடைந்து உட்காரும் போது தனுஷின் பின்னால் ஒரு கருவெள்ளை சுவற்றில் நீல நிறத்தில் திறந்திருக்கும் ஜன்னல். 2. தனுஷும் ரிச்சவும் இடைவேளையில் இணையும் பொழுது, 'சுந்தர் காலிங்' ரிங் டோன் 3. பொக்கைப்பல் பாட்டி 4. entire 'குமுதம்' sequence 5. தனுஷ் பேதலித்து அலையும்போது இரவின் இச்சையை தண்ணீர் குடித்து ஆற்றும் ரிச்சா 6. தண்ணீர் அதிகம் கலந்து சாராயம் குடுக்கும் ரிச்சா 7. தனது ரத்தத்தை ரிச்சா, தானே துடைக்கும் வரை தனுஷ் காத்துக்கிடப்பது 8. புகைப்படங்களால் ஆன சுவர் கலைந்து போவது.. அதே சுவர் மீண்டும் தன்னை புதுப்பித்துக்கொள்வது 9. சினிமா சடங்குகள் இல்லாமல், நேரம் வீணடிக்காமல் சில மாதங்களுக்குப் பின், சில வருடங்களுக்கு பின் என்று பார்வையாளர்களை கதை சொல்லி ஆக்கியது 10. தனுஷிடம் பேசாமல் இருந்த ரிச்சா கடைசியில் "ஹலோ" சொன்னவுடன் ... cut..படத்தை முடித்தது....

மற்றும் பல! நான் சொன்ன காட்சிகள் அனைத்தும் ஒரு frame அல்லது இரண்டு frame மட்டுமே. அதற்க்கு மேல் இருக்காது. ஆனால் அதில் தான் அழகு அப்பிக்கிடக்கிறது.

தனுஷின் எக்ஸ்ப்ரஷன் பாங்கில் எவ்வளவு பாவங்கள் வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை. தனது புகைப்படம் இந்தியாவிலேயே நோ.ஒன் ஆக வந்தும், அதன் அங்கீகாரம் தனக்கு கிடைக்காமல் போனதால், அழுகையின் ஊடே பெருமிதத்தில் அவர் சிரிக்கும் ஓரிரு வினாடிகள் போதும். ராயல் சல்யூட்.

"என் குழந்தையை இப்படி பண்ணிட்டியேடா பாவி" என்ற தனது கோபத்தை தனுஷிடம் பேசாமல் கதறும் காட்சியில் ரிச்சா - பஹுத் அச்சா.

இவ்வளவு நிறைகள் இருந்தாலும் குறைகள் இல்லாமல் இல்லை. முதல் நாற்பது நிமிடங்கள் படம் கொஞ்சம் மெதுவாக நகர்கிறது. முதல் பாதியில் வரும் இரண்டு பாடல்கள் - தேவை இல்லை. அல்லது சரியாக பயன்படுத்தப்பட வில்லை. அதுவும் - காதல் என் காதல் பாடலின் சிச்சுவேஷன் கடுப்பேற்றுகிறது - வை திஸ் கொலைவெறி செல்வா?

வசனங்கள் மிக எதார்த்தம். "எனக்கு போட்டோ எடுக்கரப்போதாங்க சந்தோஷமா இருக்கு. புடிக்காத வேலைய பாக்கறதுக்கு செத்துடலாம்." என்று தனுஷ் கூறும்போதும், "ரொம்ப ரசிச்சு பாக்கற நீ பண்ற வேலைய.. அதான் அழற" என்று ரிச்சா சொல்லும்போதும் கதையின் ஆழம் வசனத்திலும் இருக்க முடியும் என்று உணர்த்துகிறார் .

ஜி.வீ.பிரகாஷின் சிறந்த பின்னணி இசை, ராம்ஜியின் ஒளிப்பதிவு, கோல பாஸ்கரின் எடிட்டிங் - flawless! ராம்ஜிக்கும் பிரகாஷுக்கும் விருதுகள் வரலாம்.

மொத்தத்தில், காதல் என்றால் என்னவென்று உணர்ந்தவர்களுக்கும், வாழ்க்கையில் ஏதோ ஒன்றின் மீது தீராக்காதல் உள்ளவர்க்கும் 'மயக்கம் என்ன' - திரையரங்கில் பார்ப்பதில் - தயக்கம் என்ன?!

மதிப்பெண்கள் : 52/100

No comments:

Post a Comment