Friday, December 2, 2011

நிராகரிப்பின் சுவை

(A poem that I read in Anantha Vikatan. Very good one. The mood of the poem has nothing to do with my mindset... Peace.)

ரே ஒரு வார்த்தையிலிருந்தே
துவங்குகிறது
நிராகரிப்பின் வேதனை.

அதன் சுவை
கசப்பென்று சொல்வதுகூட
ஓர் ஒப்பீட்டுக்காகத்தான்.
அதை உணர்வது
நாவுகள் மட்டுமல்ல என்பது
மேலும் வேதனை தரக்கூடியது.

எல்லையைத்
தாண்டிக்கொண்டிருக்கும் ஏதிலி
காதலியின் திருமண அழைப்பிதழை
அஞ்சலில் பெற்றவன்
மேல்முறையீடு
கிடைக்கப் பெறாத குற்றவாளி
திருமண விருந்திலிருந்து
வெளியேற்றப்படுபவன்
நாளிதழில் தன் தேர்வு எண்ணைக்
காணப் பெறாதவன் என
நிராகரிப்பின் முகவரிகள் நீள்கின்றன.

நிராகரிப்புக்கு உள்ளானோர்
நீட்டும் சுட்டுவிரலின் முன்
குற்றவாளிகளாக
அடையாளம் காணப்படுகின்றன
அன்னை மார்பு முதல்
அணு மின் உலை வரை.

மதச் சொற்பொழிவில்
தவறாது இடம் பிடிக்கும்
நரகம்குறித்த சொல்லாடல்களைப்
புன்னகையுடனே
எதிர்கொள்கின்றனர்
நிராகரிப்பின் சுவை உணர்ந்தோர்.

- மானசீகன்

2 comments: